tamilni 391 scaled
இலங்கைசெய்திகள்

5000 மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேற ஆயத்தம்

Share

5000 மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேற ஆயத்தம்

சுமார் 5000 மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறிச் செல்ல ஆயத்தமாகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

நிபுணத்துவ மருத்துவர்கள் மற்றும் மருத்துவர்களின் பற்றாக்குறை காரணமாக மருத்துவமனைகள் மற்றும் விசேட நிபுணத்துவ மருத்துவ பிரிவுகள் மூடப்படும் அபாயம் காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான சுமார் 400 மருத்துவமனைகள் மற்றும் விசேட மருத்துவ பிரிவுகள் மூடப்படக்கூடிய சாத்தியம் உருவாகியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2022 ஆம் ஆண்டு ஆரம்பம் முதல் இதுவரை சுமார் 1800 மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறி சென்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

சேவைக்கு தகுந்த சம்பளம் இன்மை, நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமை, ஆரோக்கியமான தொழில் சூழ்நிலை இல்லாமை, நாட்டில் நிலவிவரும் ஸ்திரமற்ற நிலைமை போன்ற காரணிகளின் அடிப்படையில் மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறத் தொடங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே மருத்துவர்களின் பற்றாக்குறை காரணமாக சுமார் 20 மருத்துவமனைகள் 20 சிறிய மருத்துவமனைகள் முழுமையாக மூடப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
1c4025e825b9e5cf5fec4832de98f8c41762857214847193 original
செய்திகள்இந்தியா

சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு அவசர புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு!

கேரளாவில் அமீபா மூளை காய்ச்சல் (Amoebic Meningoencephalitis) பாதிப்பால் உயிரிழப்புகள் அதிகரித்து வரும் சூழலில், நாளை...

MediaFile 1 7
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டுப் பெண்ணிடம் பாலியல் தொந்தரவு: திருக்கோவில் பிரதேசத்தில் தலைமறைவாக இருந்த சந்தேகநபர் கல்முனையில் கைது!

திருக்கோவில் பிரதேசத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த நியூசிலாந்துப் பிரஜை ஒருவருக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றச்சாட்டுத்...

125535987 d1afd603 42be 4dc5 92e7 7796b59074e5.jpg
செய்திகள்உலகம்

கட்டாய ராணுவ சேவை அறிமுகம்: அடுத்த 10 ஆண்டுகளில் ராணுவ வீரர்களின் எண்ணிக்கை 2.6 லட்சமாக உயர இலக்கு!

நேட்டோ கூட்டணி நாடுகள் மீது ரஷியா தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளது என ஜெர்மனி ராணுவத் தலைவர்...

MediaFile 12
செய்திகள்இலங்கை

மஸ்கெலியா தோட்டத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் – சவப்பெட்டி ஊர்வலம்!

பெருந்தோட்ட மக்களுக்கான ரூ. 200 சம்பள உயர்வுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் மாறுபட்ட கருத்துகளைத் தெரிவிப்பதைக் கண்டித்து,...