tamilni 391 scaled
இலங்கைசெய்திகள்

5000 மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேற ஆயத்தம்

Share

5000 மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேற ஆயத்தம்

சுமார் 5000 மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறிச் செல்ல ஆயத்தமாகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

நிபுணத்துவ மருத்துவர்கள் மற்றும் மருத்துவர்களின் பற்றாக்குறை காரணமாக மருத்துவமனைகள் மற்றும் விசேட நிபுணத்துவ மருத்துவ பிரிவுகள் மூடப்படும் அபாயம் காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான சுமார் 400 மருத்துவமனைகள் மற்றும் விசேட மருத்துவ பிரிவுகள் மூடப்படக்கூடிய சாத்தியம் உருவாகியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2022 ஆம் ஆண்டு ஆரம்பம் முதல் இதுவரை சுமார் 1800 மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறி சென்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

சேவைக்கு தகுந்த சம்பளம் இன்மை, நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமை, ஆரோக்கியமான தொழில் சூழ்நிலை இல்லாமை, நாட்டில் நிலவிவரும் ஸ்திரமற்ற நிலைமை போன்ற காரணிகளின் அடிப்படையில் மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறத் தொடங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே மருத்துவர்களின் பற்றாக்குறை காரணமாக சுமார் 20 மருத்துவமனைகள் 20 சிறிய மருத்துவமனைகள் முழுமையாக மூடப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
09 A corruption
செய்திகள்இலங்கை

பிடியாணை, போதை வாகனம் உட்பட ஒரே நாளில் 5000க்கும் அதிகமானோர் கைது!

காவல்துறையினர் மேற்கொண்ட தொடர்ச்சியான நடவடிக்கைகளின் விளைவாக, பிடியாணை மற்றும் பல்வேறு போக்குவரத்து குற்றங்களுக்காக ஒரே நாளில்...

images 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அம்பாறையில் அதிர்ச்சிச் சம்பவம்:  மகளைத் தொடர்ச்சியாகப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை கைது!

அம்பாறை மாவட்டம், பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் உள்ள புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில்...

1795415 01
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவனில் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது!

யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவன் பகுதியில் போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர் சுன்னாகம் பொலிஸாரால் நேற்று சனிக்கிழமை...

aJqHp SD
செய்திகள்உலகம்

இந்தோனேசியா மத்திய ஜாவாவில் பாரிய மண்சரிவு: கடும் மழைவீழ்ச்சியால் 11 பேர் உயிரிழப்பு, 12 பேரைக் காணவில்லை!

இந்தோனேசியாவின் மத்திய ஜாவா மாகாணத்தில் பெய்த கடும் மழைவீழ்ச்சியால் ஏற்பட்ட பாரிய மண்சரிவில் சிக்கி 11...