14 16
இலங்கைசெய்திகள்

60 வருடங்கள் நிறைவேறாத எதிர்பார்ப்புக்கு கிடைத்தது தீர்வு: அமைச்சருக்கு மக்கள் நன்றி தெரிவிப்பு

Share

60 வருடங்கள் நிறைவேறாத எதிர்பார்ப்புக்கு கிடைத்தது தீர்வு: அமைச்சருக்கு மக்கள் நன்றி தெரிவிப்பு

கிளிநொச்சி (Kilinochchi) – ஸ்கந்தபுரம், கண்ணாபுரம் வீதியின் புனரமைப்பு பணிகள் 60 வருடங்களின் பின்னர் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து குறித்த பகுதி மக்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு (Douglas Devananda) தமது நன்றிகளை தெரிவித்துள்ளனர்.

குன்றும் குழியுமாக இருந்த குறித்த வீதியால் அப்பகுதி மக்களின் போக்குவரத்தில் நாளாந்தம் பல்வேறு அசௌகரியங்களை ஏற்பட்ட நிலையில் அந்த வீதியை புனரமைத்துக் கொள்வதில் மக்கள் பெரும் சவாலையும் தட்டிக்களிப்மையும் எதிர்கொண்டு வந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த 20.07.2024 அன்று கண்ணாபுரம் சென்றிருந்த டக்ளஸ் தேவானந்தா அப்பகுதி மக்களுடன் கலந்துரையாடி மக்களின் தேவைப்பாடுகள் மற்றும் எதிர்பார்ப்புகள் குறித்து கேட்டறிந்து கொண்டார்.

இதன்போது, கண்ணாபுரம் பிரதேச மக்களால் தமது பிரதேசத்தின் வீதியை செப்பனிட்டு தருமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

மக்களின் அவசிய தேவையாக இருந்த குறித்த கோரிக்கைக்கு முக்கியத்துவம் கொடுத்த அமைச்சர், 60 வருடங்களாக புனரமைக்கப்படாதிருந்த கண்ணாபுரம் வீதியை விரைவாக புனரமைப்பதற்கு துரித நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்திருந்தார்.

இதனை தொடரந்து, குறித்த வீதியின் புனரமைப்பு பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டு துரிதமாக முன்னெடுக்கப்படுகின்றன.

முன்னதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தொடர் முயற்சியின் பயனாக ஸ்கந்தபுரம், கண்ணகைபுரம், அக்கராயன், கோணாவில், ஆனைவிழுந்தான் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த காணிகளற்ற குடும்பங்களுக்கு அப்பகுதியில் உள்ள கரும்புத் தோட்டக் காணி பகிர்ந்தளிக்கப்பட்டிருந்தது.

அத்துடன் கிளிநொச்சி மாவட்டத்தில் கரும்பு செய்கையை மேலும் விருத்தி செய்வதற்காக ஸ்கந்தபுரத்திலுள்ள கரும்புகுத்தோட்ட காணி உரிமையாளர்களின் நலன்கருதி கட்சி நிதியிலிருந்து 15 இலட்சம் ரூபாய் நிதியை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வழங்கியிருந்தார்.

ஸ்கந்தபுரம் – கரும்புத்தோட்ட விவசாய அமைப்பினரின் கோரிக்கைக்கு அமைய குறித்த நிதியுதவி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Untitled 9
செய்திகள்இலங்கை

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கதிர்காமம் சென்ற பேருந்து தீப்பற்றி எரிந்து நாசம்!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வெலிப்பன்ன (Welipanna) நுழைவாயிலுக்கு அருகாமையில் கதிர்காமம் நோக்கிப் பயணித்த சொகுசுப் பேருந்து...

Untitled 8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் கடும் வெப்பம் மே மாதம் வரை நீடிக்கும்: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பமான காலநிலை எதிர்வரும் மே மாதம் வரை நீடிக்கும்...

Untitled 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

குமண தேசிய பூங்காவில் சிறுத்தை தாக்குதல்: செக் குடியரசு நாட்டுத் துறவி உயிரிழப்பு!

இலங்கையின் அம்பாறை மாவட்டத்திலுள்ள குமண தேசிய பூங்காவிற்குட்பட்ட பம்பர கஸ்தலாவ ஆரண்ய சேனாசனத்தில் (Bambara Kasthalawa...

Untitled 6
செய்திகள்உலகம்

வட்ஸ்அப்பில் அதிரடி மாற்றங்கள்: ஐபோன் பயனர்களுக்கும் இரட்டை கணக்கு வசதி அறிமுகம்!

பயனர்களின் அன்றாடத் தகவல் பரிமாற்றத்தை மேலும் எளிமையாகவும், நேர்த்தியாகவும் மாற்றும் நோக்கில் வட்ஸ்அப் (WhatsApp) நிறுவனம்...