15 4
இலங்கைசெய்திகள்

பொது வேட்பாளர் முயற்சி தமிழினத்துக்கு ஆபத்தே! டக்ளஸ்

Share

பொது வேட்பாளர் முயற்சி தமிழினத்துக்கு ஆபத்தே! டக்ளஸ்

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்தும் முயற்சியானது, பயனற்றது மாத்திரமல்ல அது தமிழ் மக்களுக்கு பாதிப்பையே ஏற்படுத்தும் என ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda) தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் (Jaffna) உள்ள அவரது கட்சித் தலைமை அலுவலகத்தில் நேற்று (15.06.2024) நடத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பில் சிலர் பேசி வருகின்றனர். அதற்கான முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகின்றன.

ஆனால், என்னைப் பொறுத்த வரையில் தமிழ்ப் பொது வேட்பாளர் என்பது அவசியமில்லை என்றே நினைக்கின்றேன். அந்த முயற்சியானது தமிழ் மக்களுக்குப் பயனற்றது மாத்திரமல்ல அது பாதிப்பையே ஏற்படுத்தும்.

உண்மையில் தமிழ் மக்களுக்கு நீண்ட காலமாக இருந்து வருகின்ற பிரச்சினைகளைத் தீராப் பிரச்சினைகளாக வைத்திருப்பதற்கான ஒரு முயற்சியாகவே இதனை நான் பார்க்கின்றேன்.

இவர்கள் எல்லோரையும் உருளைக்கிழங்கைப் போல் மூடையில் ஒன்றாகக் கட்டி வைத்திருந்தாலும் இன்று தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இல்லாத சூழலில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசைக்கு உருண்டோடியது போன்று சிதறுப்பட்டு இருக்கின்றனர்.

இவ்வாறான நிலைமையில் இவர்களுக்குள் ஐக்கியம், ஒற்றுமை எங்கே இருக்கின்றது? பல வருடங்களாக இப்படி கட்டி வைத்து என்ன கிடைத்தது? அழிவைக் கட்டுப்படுத்த முடிந்ததா? அல்லது முன்னேற்றம் ஏதும் வந்ததா? ஒன்றும் இல்லாத நிலையில் இப்போது தேர்தல் வருகின்றபடியால் மீண்டும் அதைப் பற்றிப் பேசுகின்றனர்.

எம்மைப் பொறுத்தவரையில் இவர்களைப் போன்று அல்லாமல் கடந்த காலங்களில் நாம் மக்களுக்கு எதைக் கூறினோமே அதனையே இப்போதும் கூறுகின்றோம்.

ஆக சொல்வதைச் செய்வதும் செய்வதைச் சொல்வதும்தான் நான். எனவே, எங்களை நம்பி மக்கள் எம்மோடு பயணிப்பதன் ஊடாக பல்வேறு விடயங்களைப் பெற்றுக்கொடுக்க முடியும்” என்றார்.

Share
தொடர்புடையது
1722752828 dds
செய்திகள்இலங்கை

சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த இலங்கை பிரஜை இராமேஸ்வரத்தில் கைது: புழல் சிறையில் அடைப்பு!

யாழ்ப்பாணத்திலிருந்து கடல் மார்க்கமாகச் சட்டவிரோதமாகப் புறப்பட்டு, இந்தியக் கடற்கரையை அடைந்த இலங்கை பிரஜை ஒருவர், இராமேஸ்வரத்தில்...

2 nurse
இலங்கைசெய்திகள்

தாதியர் கல்லூரிகளில் ஆசிரியர் பற்றாக்குறை: 175 வெற்றிடங்களை நிரப்ப உடனடியாக ஆட்சேர்ப்பு – சுகாதார அமைச்சர் உத்தரவு!

நாட்டின் தாதியர் கல்லூரிகளில் (Nursing Colleges) தாதியர் ஆசிரியர்களின் பற்றாக்குறை காரணமாக, ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு...

MediaFile 3 1
செய்திகள்அரசியல்இலங்கை

போதைப்பொருள் உற்பத்தி வழக்கு: சம்பத் மனம்பேரிக்கு சொந்தமான பேருந்து, கார், கெப் வாகனம் பறிமுதல்!

தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள சம்பத் மனம்பேரிக்கு சொந்தமானதாகக் கூறப்படும் ஒரு...

1728539417 vimalveravamnsa 2
செய்திகள்அரசியல்இலங்கை

நவம்பர் 21 எதிர்ப்புப் பேரணி: தேசிய சுதந்திர முன்னணி பங்கேற்க மறுப்பு – விமல் வீரவங்ச அறிவிப்பு!

எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி எதிர்க்கட்சிகள் முன்னெடுக்கவுள்ள எதிர்ப்புப் பேரணியில் பங்கேற்கப் போவதில்லை என தேசிய...