18 4
இலங்கைசெய்திகள்

இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறலை அனுமதிக்க முடியாது!

Share

இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறலை அனுமதிக்க முடியாது!

எமது கடற்பரப்புக்குள் இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்களை எந்த வகையிலும் அனுமதிக்க முடியாது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பி.டி.பி.) செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda) தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் (Jaffna) அமைந்துள்ள அவரது கட்சி அலுவலகத்தில் நேற்று (15.06.2024) நடத்திய ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போது, இந்திய கடற்றொழிலாளர்கள் விவகாரம் தொடர்பான கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

“எமது கடற்பரப்புக்குள் இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்களை எந்த வகையிலும் அனுமதிக்க முடியாது. அவ்வாறு அத்துமீறல்கள் இனிமேல் நடக்காது என்று இப்போது என்னால் உறுதியாக சொல்லவும் முடியாது.

இந்த பிரச்சினையை இராஜதந்திர ரீதியாக மட்டுமன்றி சட்ட ரீதியாகவும் எதிர்கொண்டு தடுக்கத் தயாராக இருப்பதோடு அதற்கான முனைப்புகளிலேயே தற்போது ஈடுபட்டு வருகின்றோம்.

எமது ஜனாதிபதி இந்தியா சென்றபோது இரு நாட்டு கடற்றொழிலாளர் விவகாரம் தொடர்பில் இந்தியப் பிரதமருடனும் இந்திய வெளிவிவகார அமைச்சருடனும் கலந்துரையாடியுள்ளார்.

வடக்கு மாகாண கடற்றொழிலாளர்களுடைய இந்தப் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என்பதில் நான் தெளிவாக இருக்கின்றேன். நான் அரசியலுக்காக எதையும் பேசுவதில்லை. மக்கள் நலன் சார்ந்தே என்னுடைய செற்பாடுகள் அமையும்” என்றார்.

Share
தொடர்புடையது
istockphoto 464705134 612x612 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வீதிகளில் ரேஸ் செல்லும் இளைஞர்களுக்கு எச்சரிக்கை: மோட்டார் சைக்கிள்களை அரசுடைமையாக்க பொலிஸ் மா அதிபர் உத்தரவு!

பிரதான வீதிகளில் பாதுகாப்பற்ற முறையில் மோட்டார் சைக்கிள்களை செலுத்தும் அனைத்து நபர்களையும் உடனடியாகக் கைது செய்யுமாறு...

rfv 1 10d
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தேர்தலை நடத்தாமல் இருப்பதை ஏற்க முடியாது: யாழில் தமிழ் கட்சிகள் கூடிப் பேச்சு!

மாகாண சபைத் தேர்தல் முறைமை மறுசீரமைக்கப்பட வேண்டும் என்பதற்காக தேர்தலையே நடத்தாமல் இருப்பது எந்த காலத்திலும்...

download 2026 01 20T171116.980
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அபிவிருத்தியில் பாகுபாடு: மன்னார் பிரதேச சபையிலிருந்து 6 உறுப்பினர்கள் வெளிநடப்பு!

மன்னார் பிரதேச சபையின் 8 ஆவது அமர்வு நேற்றுமுன்தினம் (19) இடம் பெற்ற போது இலங்கைத்...

26 696e81aa1ff67
செய்திகள்இலங்கைபிராந்தியம்

திருகோணமலை சிலை விவகாரம்: சிறையிலுள்ள சக பிக்குகளை கஸ்ஸப தேரர் அச்சுறுத்துவதாகத் தகவல்!

திருகோணமலை கடற்கரைப் பகுதியில் சட்டவிரோதமாகப் புத்தர் சிலையை நிறுவிய விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள பலாங்கொடை கஸ்ஸப...