10 13
இலங்கைசெய்திகள்

ராஜபக்சவை எதிர்த்தவர்களுக்கு அரசியல் எதிர்காலமில்லை! ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பெருமிதம்

Share

ராஜபக்சவை எதிர்த்தவர்களுக்கு அரசியல் எதிர்காலமில்லை! ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பெருமிதம்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு எதிராக செயல்படுவோரினால், அரசியல் ரீதியாக தலைதூக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 21 ஆம் திகதி அனுராதபுரத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் முதலாவது தேர்தல் பிரசார கூட்டம் நடைபெறும் என அவர் தெரிவித்துள்ளார்.

அன்றைய தினம் இந்த கூட்டத்திற்கு மக்கள் வருகை தருவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மகிந்த ராஜபக்சவை எதிர்த்தவர்களுக்கு அரசியல் எதிர்காலம் இல்லை எனவும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு அந்த நிலைமையே உருவாகியுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் இருந்து, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு வழங்கியவர்கள் மீண்டும் கட்சியில் இணைவது குறித்து பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்க மிகவும் குறைந்த அளவு வாக்குகளையே பெற்றுக்கொள்வார் என தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி இளம் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை களம் இறக்கியுள்ளதாகவும் அனைவரும் அவருடன் இணைந்து கொள்ள முடியும் என எனவும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
1276730 0.jpeg
செய்திகள்உலகம்

ஈரான் சிறைப்பிடித்த எண்ணெய்க் கப்பல் ‘தலாரா’ விடுவிப்பு: 21 பணியாளர்களும் பாதுகாப்பாக உள்ளனர்!

ஹாா்முஸ் நீரிணைப் பகுதியில் ஈரான் கடந்த வாரம் சிறைப்பிடித்த, மாா்ஷல் தீவுகளின் கொடியேற்றப்பட்ட ‘தலாரா’ (Talara)...

pm modi 13 20251119144744
இந்தியாசெய்திகள்

ஜி20 மாநாட்டில் பங்கேற்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தென்னாபிரிக்காவிற்குப் பயணம்!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தென்னாபிரிக்காவிற்கு விஜயம் செய்யத் தயாராகி வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன....

images 5 7
செய்திகள்பிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் சோகம்: கால் தவறி கிணற்றில் வீழ்ந்த வெளிநாட்டுப் பிரஜை உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் – ஆறுகால்மடம் பகுதியில் நபரொருவர் கால் தவறி கிணற்றுக்குள் வீழ்ந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர்...

images 4 8
இலங்கைசெய்திகள்

அரச மருத்துவமனைகளில் 150 மருந்து வகைகளுக்குத் தட்டுப்பாடு: சிகிச்சை சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்!

அரச மருத்துவமனைகளில் சுமார் 150 மருந்து வகைகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்...