tamilni 171 scaled
இலங்கைசெய்திகள்

நிதி அமைச்சை நம்ப வேண்டாம் என அரசாங்கத்திற்கு எச்சரிக்கை

Share

நிதி அமைச்சை நம்ப வேண்டாம் என அரசாங்கத்திற்கு எச்சரிக்கை

நிதி அமைச்சை நம்ப வேண்டாம் என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அலுத்கமகே அரசாங்கத்தை எச்சரித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நிதி அமைச்சினால் வழங்கப்படும் புள்ளிவிபரத் தகவல்களின் துல்லியத் தன்மை குறித்து அவதானத்துடன் இருக்க வேண்டுமென அவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவையும், அரசாங்கத்தையும் எச்சரித்துள்ளார்.

நிதி அமைச்சின் அதிகாரிகளே தாங்கள் வழங்கும் தகவல்களில் தவறு காணப்பட்டதனை கடந்த காலங்களில் ஒப்புக் கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

எனவே இந்த தரவுகள் குறித்து கண்காணிக்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அண்மையில் தமது உரையில் பயன்படுத்திய புள்ளிவிபரத் தரவுகளின் துல்லியத்தன்மை குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டியது அவசியமானது என மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
10 14
செய்திகள்உலகம்

பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடி: அரசு அதிரடி சிக்கன நடவடிக்கைகள் அறிவிப்பு!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள உலகளாவிய எரிபொருள் விலை உயர்வு மற்றும் பொருளாதாரப்...

09 14
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் பல மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள சமீபத்திய வானிலை அறிக்கையின்படி, நாட்டின் பல மாகாணங்களில் இன்று பிற்பகல் 2:00...

08 14
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

போதைப்பொருள் பணத்தில் சொத்துச் சேகரிப்பு: 4 கோடி ரூபாய் பெறுமதியான வீடு மற்றும் சொத்துக்கள் முடக்கம்!

போதைப்பொருள் கடத்தல் மூலம் சட்டவிரோதமாக ஈட்டிய பணத்தைப் பயன்படுத்தி சொத்துக்களைச் சேர்த்த குற்றச்சாட்டில், சந்தேகநபர் ஒருவரின்...

05 15
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சிவனொளிபாதமலைக்கு போதைப்பொருட்களுடன் சென்ற 08 பேர் கைது: மவுசாக்கலை சோதனைச் சாவடியில் சிக்கினர்!

புனித சிவனொளிபாதமலைக்கு யாத்திரை சென்ற பக்தர்கள் என்ற போர்வையில் போதைப்பொருட்களைக் கொண்டு சென்ற 8 பேர்...