4 1
இலங்கைசெய்திகள்

எதிர்க்கட்சிகளின் சதி வலையில் சிக்காதீர்கள் :அநுர அரசின் பெண் அமைச்சர் விடுத்த அறிவிப்பு

Share

எதிர்க்கட்சிகளின் சதி வலையில் சிக்காதீர்கள் :அநுர அரசின் பெண் அமைச்சர் விடுத்த அறிவிப்பு

ஆடம்பர வாகனங்களை ஓட்டுவதற்கும், கதவுகளைத் திறப்பதற்கும் வேலையாட்கள் இருக்க வேண்டும் என்ற பிரத்தியேக ஆசை எதுவும் இல்லை என குழந்தைகள் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் சரோஜா போல்ராஜ்(saroja pauiraj) தெரிவித்துள்ளார்.

தனது வேலையை இன்னும் திறம்படச் செய்ய வாகனம் மட்டுமே தேவை என்கிறார்.

யாருக்கும் வாகன உரிமம் வழங்கப்படாது

புதிய அரசாங்கத்தின் கீழ், யாருக்கும் வாகன உரிமம் வழங்கப்படாது என்றும், உரிய கடமைகளுக்கு மட்டுமே வாகனம் வழங்கப்படும் என்றும், ஐந்து வருட முடிவில் வாகனங்கள் திரும்ப ஒப்படைக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்..

மாத்தறையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அடுத்த தேர்தலுக்கு முன்னர் அரசாங்கத் தின் மீது அதிருப்தி அடையச் செய்யும் அரசியல் தந்திரமாக அரிசி, தேங்காய் இல்லை என எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்துவதாகவும், அவர்கள் மீது மக்கள் வீழ்ந்து விடக்கூடாது என்றும் அவர் கூறினார்.

இருப்பினும், பொதுத் தேர்தலுக்குப் பிறகு தீவிரமாக வேலை செய்வதற்கான வாய்ப்பு மழை மற்றும் வெள்ளத்தால் தடைப்பட்டது வருத்தமளிக்கிறது, என்று அவர் தொடர்ந்து கூறினார்.

மேலும் அடுத்த தேர்தலுக்கு முன்னர் அரசாங்கத்தை அதிருப்தி அடையச் செய்யும் அரசியல் தந்திரமாக தேங்காய் இல்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன, அதற்காக மக்கள் அதில் விழந்துவிட வேண்டாம் என்றும் அவர் கூறினார்.

Share
தொடர்புடையது
30
செய்திகள்இந்தியா

உலகத் தலைவர்களில் முதலிடம் பிடித்து மோடி வரலாற்றுச் சாதனை!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில்  100 மில்லியன் (10 கோடி) பின்தொடர்பாளர்களை...

29
செய்திகள்விளையாட்டு

டி20 உலகக் கோப்பை: ஜிம்பாப்வே பந்துவீச்சை சிதறடித்த இந்திய பேட்ஸ்மேன்கள் – 20 ஓவர்களில் 256 ஓட்டங்கள் குவிப்பு!

2026 ஐசிசி டி20 உலகக் கோப்பையின் சூப்பர்-8 சுற்றில் இன்று நடைபெற்று வரும் முக்கியமான போட்டியில்,...

28
அரசியல்இலங்கைசெய்திகள்

“சுரேஷ் சலேயின் கைது ஒரு கண்துடைப்பு”: அரசாங்கம் மீது சரத் வீரசேகர கடும் தாக்குதல்!

ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேயின் கைது என்பது, உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களையும் கத்தோலிக்க...

27
செய்திகள்உலகம்

அமெரிக்கா – ஈரான் இடையே 3-ம் கட்ட பேச்சுவார்த்தை: அணு ஆயுதத் திட்டத்தை முடக்க டிரம்ப் அழுத்தம்!

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையிலான அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான மூன்றாவது சுற்று மறைமுகப் பேச்சுவார்த்தைகள்...