4 1
இலங்கைசெய்திகள்

எதிர்க்கட்சிகளின் சதி வலையில் சிக்காதீர்கள் :அநுர அரசின் பெண் அமைச்சர் விடுத்த அறிவிப்பு

Share

எதிர்க்கட்சிகளின் சதி வலையில் சிக்காதீர்கள் :அநுர அரசின் பெண் அமைச்சர் விடுத்த அறிவிப்பு

ஆடம்பர வாகனங்களை ஓட்டுவதற்கும், கதவுகளைத் திறப்பதற்கும் வேலையாட்கள் இருக்க வேண்டும் என்ற பிரத்தியேக ஆசை எதுவும் இல்லை என குழந்தைகள் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் சரோஜா போல்ராஜ்(saroja pauiraj) தெரிவித்துள்ளார்.

தனது வேலையை இன்னும் திறம்படச் செய்ய வாகனம் மட்டுமே தேவை என்கிறார்.

யாருக்கும் வாகன உரிமம் வழங்கப்படாது

புதிய அரசாங்கத்தின் கீழ், யாருக்கும் வாகன உரிமம் வழங்கப்படாது என்றும், உரிய கடமைகளுக்கு மட்டுமே வாகனம் வழங்கப்படும் என்றும், ஐந்து வருட முடிவில் வாகனங்கள் திரும்ப ஒப்படைக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்..

மாத்தறையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அடுத்த தேர்தலுக்கு முன்னர் அரசாங்கத் தின் மீது அதிருப்தி அடையச் செய்யும் அரசியல் தந்திரமாக அரிசி, தேங்காய் இல்லை என எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்துவதாகவும், அவர்கள் மீது மக்கள் வீழ்ந்து விடக்கூடாது என்றும் அவர் கூறினார்.

இருப்பினும், பொதுத் தேர்தலுக்குப் பிறகு தீவிரமாக வேலை செய்வதற்கான வாய்ப்பு மழை மற்றும் வெள்ளத்தால் தடைப்பட்டது வருத்தமளிக்கிறது, என்று அவர் தொடர்ந்து கூறினார்.

மேலும் அடுத்த தேர்தலுக்கு முன்னர் அரசாங்கத்தை அதிருப்தி அடையச் செய்யும் அரசியல் தந்திரமாக தேங்காய் இல்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன, அதற்காக மக்கள் அதில் விழந்துவிட வேண்டாம் என்றும் அவர் கூறினார்.

Share
தொடர்புடையது
ahr0chm6ly9jyxnzzxr0zs5zcghkawdp 4
உலகம்செய்திகள்

துப்பாக்கியைப் பிடுங்கிய ‘ஹீரோ’ அஹமது அல் அஹமதுவைச் சந்தித்த பிரதமர் அல்பானீஸ்; துப்பாக்கிக் கட்டுப்பாடு மேலும் அதிகரிப்பு!

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள போண்டி கடற்கரையில் (Bondi Beach) யூதர்கள் நிகழ்வில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டின்போது, துணிச்சலுடன்...

coverimage 01 1512114047 1546165239 1562741874
இலங்கைசெய்திகள்

இலங்கையில் எயிட்ஸ் தொற்று 6% அதிகரிப்பு:உயிரிழப்புகள் 30 ஆகப் பதிவு!

இலங்கையில் எயிட்ஸ் தொற்று அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, 2025ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில்...

images 5 5
உலகம்செய்திகள்

இந்தியா-ரஷ்யா இராணுவ ஒப்பந்தம்: ‘தளவாட ஆதரவு பரஸ்பரப் பரிமாற்ற’ சட்டத்துக்குப் புட்டின் ஒப்புதல்!

இந்தியா மற்றும் ரஷ்யா இடையேயான ‘Reciprocal Exchange of Logistics Support’ (தளவாட ஆதரவின் பரஸ்பரப்...

articles2FvNVHzqk0rGKKgejyoUzJ
இலங்கைசெய்திகள்

கல்வி ஒத்துழைப்பு வலுப்படுத்தல்: வெளிநாட்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய அமைச்சரவை அனுமதி!

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராகப் பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்த...