3 1
இலங்கைசெய்திகள்

மஹிந்தானந்தவிற்காக களத்தில் குதித்த பௌத்த பிக்குகள்

Share

முன்னாள் விளையாட்டு துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தண்டிக்கப்பட்டமையை பட்டாசு கொளுத்தி கொண்டாடிய நபர்களுக்கு கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது.

பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு தொகுதி மக்கள் மஹிந்தானந்தவிற்கு தண்டனை விதிக்கப்பட்ட செய்தி வெளியானதன் பின்னர் பட்டாசு கொளுத்தி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தனர்.

எனினும் இந்த செயல் வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியது என பௌத்த பிக்குகள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக நாவலப்பிட்டி பகுதியைச் சேர்ந்த பௌத்த பிக்குகள் இன்றைய தினம் விசேட செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தி இந்த எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

நாவலப்பிட்டி நகரம் தற்பொழுது அடைந்துள்ள அபிவிருத்திக்கு மஹிந்தானந்த மிகப்பெரிய பங்களிப்பினை வழங்கியுள்ளதாக பௌத்தப்பிக்குகள் தெரிவித்துள்ளனர்.

பௌத்த மதத்திலும் ஏனைய மதங்களிலும் ஒருவர் பிரச்சினையில் இருக்கும் போது அதனை கொண்டாடுவது ஏற்புடையதல்ல எனவும் எந்த ஒரு மதத்திலும் ஒருவரின் துன்பியல் நிலையை கொண்டாடுவது தவறானது என்றே போதிக்கப்படுகின்றது என பௌத்த பிக்குகள் சுட்டிக்காட்டி உள்ளனர்.

பௌத்த மதத்திற்கும் பிரதேசத்திற்கும் முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அளப்பரிய சேவைகளை வழங்கியுள்ளார் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மஹிந்தானந்தவிற்கு சிறை தண்டனை விதிக்கப்பட்ட போது அதனை பட்டாசு கொளுத்தி கொண்டாடியவர்கள் கண்டிக்கப்பட வேண்டியவர்கள் என பௌத்தப்பிக்குகள் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்தவிற்கு பௌத்தப்பிக்குகளினதும் ஏனைய சாதாரண பொது மக்களினதும் பூரண ஆதரவு காணப்படுகிறது என்பதனை இந்த வேளையில் நினைவூட்டுவதாக பௌத்தப்பிக்குள் வலியுறுத்தியுள்ளனர்.

Share
தொடர்புடையது
IMG 9924 1024x683 1
செய்திகள்உலகம்

சூடானில் மார்ச் மாதத்துடன் உணவு இருப்பு தீரும் அபாயம்: 700 மில்லியன் டொலர் அவசர நிதியைக் கோருகிறது ஐ.நா!

உள்நாட்டுப் போரினால் பேரழிவைச் சந்தித்துள்ள சூடானில், உடனடியாகக் கூடுதல் நிதி உதவி வழங்கப்படாவிட்டால் மிக மோசமான...

10aa5a71cfd76011153a66552523da5f7560cde2db35ee6d414158cd57f94959
உலகம்செய்திகள்

டோக்கியோவில் மின்தடையால் ரயில் சேவைகள் முடக்கம்: 6.7 லட்சம் பயணிகள் பாதிப்பு!

ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் இன்று (16) ஏற்பட்ட திடீர் மின்தடை மற்றும் தீ விபத்து காரணமாக...

1735040735 c
செய்திகள்இலங்கை

கிராம அலுவலர் மீது தாக்குதல்: நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரனை ஜனவரி 20-ல் ஆஜர்ப்படுத்த நீதிமன்றம் உத்தரவு!

கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் இன்று (16) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வழக்கின் அடிப்படையில், நாடாளுமன்ற உறுப்பினர் க....

Keheliya Rambukwella
செய்திகள்இலங்கை

கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் குடும்பத்தினருக்கு எதிராக மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை: நீதவான் நீதிமன்ற வழக்கு முடிவு!

முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, அவரது புதல்வர் ரமித் ரம்புக்வெல்ல மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராகப்...