16 15
இலங்கைசெய்திகள்

ட்ரம்பை குறிவைத்து மீண்டும் துப்பாக்கிச்சூட்டு தாக்குதல்: வெளியான தகவல்

Share

ட்ரம்பை குறிவைத்து மீண்டும் துப்பாக்கிச்சூட்டு தாக்குதல்: வெளியான தகவல்

அமெரிக்காவின் (US) முன்னாள் ஜனாதிபதியான டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) மீது நேற்று மீண்டும் துப்பாக்கிச்சூடு தாக்குதல் முயற்சி நடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இச்செய்தியினை அமெரிக்காவின் பத்திரிகை ஒன்று வெளியிட்டுள்ளது.

இதற்கமைய, புளோரிடாவில் வெஸ்ட் பாம் கடற்கரை அருகே உள்ள ட்ரம்புக்கு சொந்தமான கோல்ஃப் மைதானத்துக்கு வெளியே இந்த துப்பாக்கிச்சூடு நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகின்றது.

இதன்போது, ட்ரம்ப் அந்த மைதானத்தில் இருந்துள்ள நிலையில் அங்கிருந்த இரண்டு நபர்களுக்கு இடையே குறித்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து, ட்ரம்ப், அவ்விடத்திலிருந்து பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

எதிர்வரும் நவம்பர் மாதம் அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இவ்வாறான ஒரு தாக்குதல் முயற்சி இடம்பெற்றுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக, கடந்த ஜூலை மாதம் பென்சில்வேனியாவில் ட்ரம்ப் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த போது அவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் அவருடைய வலதுகாதில் காயம் ஏற்பட்டது.

Share
தொடர்புடையது
23 64b883bc2cf55
செய்திகள்இலங்கை

வடமேல் மாகாண மக்களுக்கு மகிழ்ச்சிச் செய்தி: ஒரு நாளில் தேசிய அடையாள அட்டை சேவை குருணாகலில் ஆரம்பம்!

வடமேல் மாகாண மக்களின் வசதி கருதி, தேசிய அடையாள அட்டையை ஒரு நாளில் வழங்கும் சேவை...

mcms
உலகம்செய்திகள்

வீரப்பன் தேடுதல் வேட்டை: பாதிக்கப்பட்ட மக்களுக்கு ₹ 2.59 கோடி இழப்பீடு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது அதிரடிப் படையால் (Special Task Force – STF) பாதிக்கப்பட்ட...

21097036 truck
செய்திகள்உலகம்

அமெரிக்காவில் கட்டாய ஆங்கிலத் தேர்வில் தோல்வி: 7,000க்கும் மேற்பட்ட பாரவூர்தி சாரதிகள் பணி நீக்கம்!

அமெரிக்காவில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பாரவூர்தி சாரதிகளைப் பாதிக்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, இந்த ஆண்டு...

539661 trisha mks
செய்திகள்இந்தியா

திரிஷா, விஷால், மணிரத்னம் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: டி.ஜி.பி. அலுவலகத்திற்கு மின்னஞ்சல் – புரளி என உறுதி!

நாடு முழுவதும் அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் மற்றும் முக்கிய நிறுவனங்களுக்குச் சமூக ஊடகங்கள் மூலம்...