17 23
இலங்கைசெய்திகள்

வளங்களை விற்பவர்களுக்கு வாக்களிக்க வேண்டாம் : ஏ.எல். சுகத் பிரசாந்த

Share

வளங்களை விற்பவர்களுக்கு வாக்களிக்க வேண்டாம் : ஏ.எல். சுகத் பிரசாந்த

ஜனாதிபதி தேர்தலில் நாங்கள் சஜித் பிரேமதாசாவுக்கு எல்லோரும் உதவி செய்ய வேண்டும் என்று தீர்மானம் எடுத்துள்ளோம் என தேசிய ஐக்கிய நல்லிணக்க முன்னணி கட்சியின் தலைவர் ஏ.எல்.சுகத் பிரசாந்த தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் உள்ள அவரது கட்சி காரியாலயத்தில் நேற்று (24)மாலை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில், இதற்கு காரணம் கடந்த கால அரசாங்கம் ரணில் விக்ரமசிங்க இந்த ஆட்சியினுடைய தலைவராக இருந்தார். அவரை நாங்கள் பார்த்தோம் இந்த திருகோணாமலைக்கு என்ன நடந்தது நாட்டைப் பற்றி யோசிக்க முன்னர் எங்களுடைய திருகோணமலையை பற்றி யோசிக்க வேண்டும்.

இந்த நாட்டின் முக்கியமான ஒரு இடம்தான் திருகோணாமலை பொருளாதாரம் ஏனைய விடயங்களுக்கும் முக்கியமாக இருக்கிறது.

ஜனாதிபதியினால் அனுப்பப்பட்ட ஆளுநர் அவருடைய நோக்கங்களை செய்வதற்காக அனுப்பி உள்ளார் அவர் நினைக்கிற மாதிரி இந்த திருகோணமலையில் உள்ள காணிகள், வளங்கள் அனைத்தையும் வெளிநாட்டுக்கு பெரிய பெரிய நிறுவனங்களுக்கு விற்பனை செய்கிறார்கள்.

இது எங்கள் கண்முன்னால் நடக்கிறது இதை யாரும் கேட்பார் இல்லை நாங்கள் மாத்திரம் தான் இதனை எடுத்துச் சொன்னோம் . இதனைக் காப்பாற்றினோம் மக்களுக்காக வேண்டி நாங்கள் செய்தோம்.

இந்த நாட்டில் உள்ள அரசியல்வாதி கட்சிகள் எதுவும் செய்யவில்லை சிங்கள கட்சி முஸ்லிம் கட்சி தமிழ் கட்சி யாரும் பேசவில்லை. அனுகுமார திசாநாயக்காவும் இவை பற்றி பேசவில்லை ஆனால் சஜித் பிரேமதாச மட்டும் கதைத்துள்ளார்.

மக்களிடம் இருந்துதான் காசு வாங்கி இந்த அரசாங்கம் நாட்டை நடாத்தி கொண்டிருக்கின்றார்கள்.

இந்த முறை நீங்கள் சஜித் பிரேமதாசாவை நாட்டின் தலைவராக உருவாக்குவதற்கு ஜனாதிபதிதேர்தலில் ஆக்குவதற்கு வாக்குகளை அளியுங்கள் என்றார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...