இலங்கைசெய்திகள்

பங்களாதேஷின் கறுப்புப்பட்டியல் நிறுவனத்துக்கு அரச மருந்துக் கூட்டுத்தாபனம் அனுமதி: சுமத்தப்படும் குற்றச்சாட்டு

19 14
Share

அரச மருந்துக் கூட்டுத்தாபனம் தொடர்பில்,மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்களின் தொழிற்சங்க கூட்டணி குற்றச்சாட்டை முன்வத்துள்ளது.

நோயாளிகளின் வாய்களை சுத்தம் செய்யப் பயன்படுத்தப்படும் கிருமிநாசினியை வழங்குவதற்காக ஒரு கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்ட பங்களாதேஷ் நிறுவனத்திற்கு கேள்விப்பத்திரத்தை, அந்த கூட்டுத்தாபனம் வழங்கியதாக, தொழிற்சங்க கூட்டணி குற்றம் சாட்டியுள்ளது.

ஒரு செய்தியாளர் கூட்டத்தில் பேசிய அந்தக் கூட்டணியின் தலைவர், சமல் சஞ்சீவ, நிறுவனத்தின் சர்ச்சைக்குரிய நிலையை மீறி இந்த கேள்விப்பத்திர வழங்கல் முடிவு எடுக்கப்பட்டதாக கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம், நோயாளிகளின் வாய்களை சுத்தம் செய்யப் பயன்படுத்தப்படும், 270,000 கிருமிநாசினி போத்தல்களை வாங்க கேள்விப்பத்திரங்கள் கோரப்பட்டன.

இதன்படி 2024 டிசம்பர் 12 அன்று ஒரு முடிவு எட்டப்பட்டது, மிகக் குறைந்த ஏலதாரருக்கு இந்த கேள்விப்பத்திரம் வழங்கப்பட்டது.

எனினும், கேள்விப்பத்திரம் வழங்கப்பட்ட இந்த நிறுவனம் முன்னர், இலங்கையில் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்ட நிறுவனம் என்று மருத்துவர் கூட்டணி சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன் இந்த நிறுவனம், இலங்கை அரசாங்கத்திற்கு 127 மில்லியன் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது என்றும் மருத்துவர் சஞ்சீவ கூறியுள்ளார் .

Share
Related Articles
29 2
உலகம்செய்திகள்

செங்கடலில் அடுத்தடுத்து அமெரிக்க போர் விமானங்கள் விபத்து: உயிர் தப்பிய விமானிகள்!

செங்கடலில் அமெரிக்க போர் விமானம் ஒன்று விமானம் தாங்கி கப்பலில் தரையிறங்கும் போது ஏற்பட்ட விபத்தில்...

26 4
உலகம்செய்திகள்

பெரிய அறிவிப்பு ஒன்று விரைவில் வெளியாகும்: ட்ரம்ப் செய்தியால் பரபரப்பாகும் இணையம்

அதிரவைக்கும் மிகப்பெரிய அறிவிப்பு ஒன்று விரைவில் வெளியாகும் என ட்ரம்ப் கூறியுள்ள விடயத்தால் இணையம் பரபரப்பாகியுள்ளது....

27 3
உலகம்செய்திகள்

அணு ஆயுத நாடுகள் 2024: இந்தியா எங்கே உள்ளது? – அதிர்ச்சி தரும் உண்மைகள்!

இந்தியா-பாகிஸ்தான் இடையே அதிகரித்து வரும் போர் பதற்றம் இருநாட்டு மக்களிடையே உச்சக்கட்ட விழிப்பு நிலையை ஏற்படுத்தியுள்ள...

28 3
உலகம்செய்திகள்

போரில் பாகிஸ்தான் வென்றால் அந்த இந்திய நடிகை வேண்டும் – மதகுரு சர்ச்சை பேச்சு

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர்....