24 66c0145ad7401
இலங்கைசெய்திகள்

பிறப்பு, இறப்பு மற்றும் திருமணங்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

Share

பிறப்பு, இறப்பு மற்றும் திருமணங்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

இந்த ஆண்டு முதல் விவாகரத்து வழக்குகள் தொடர்பான தகவல்களை வெளியிடுவதற்கு தேவையான ஆதாரங்களை வழங்குமாறு நீதிபதிகளுக்கு நீதிச்சேவை ஆணைக்குழு அறிவித்துள்ளது.

நீதி அமைச்சினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன அனைத்து மாவட்ட நீதிபதிகள் மற்றும் மேலதிக மாவட்ட நீதிபதிகளுக்கு அறிவித்துள்ளார்.

பதிவாளர் நாயகம் திணைக்களம், வருடாந்தம் இலங்கையில் பதிவு செய்யப்பட்ட பிறப்பு, இறப்பு மற்றும் திருமணங்கள் தொடர்பான தகவல்களை மாவட்ட மட்டத்தில் வெளியிட்டு வருகின்றது.

இதற்கமைய, விவாகரத்து தொடர்பான தகவல் கோரிக்கைகள் நிவர்த்தி செய்யப்படுவதால், விவாகரத்து தொடர்பான ஆதாரங்களை இந்த ஆண்டு முதல் வெளியிட பதிவாளர் நாயகம் திணைக்களம் தீர்மானித்துள்ளதாகவும் பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, இந்த ஆண்டு முதல் விவாகரத்து வழக்குகள் தொடர்பான தகவல்களை வெளியிடுவதற்கு தேவையான தகவல்களை வழங்குமாறு நீதிபதிகளுக்கு நீதிச்சேவை ஆணைக்குழு அறிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
GettyImages 1202240221
செய்திகள்உலகம்

மார்ச் 20-ல் வெளியாகிறது புதிய BTS அல்பம் – உலகச் சுற்றுப்பயணத்திற்கும் தயார்!

உலகெங்கும் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்டுள்ள தென் கொரியாவின் புகழ்பெற்ற கே-பாப் (K-pop) இசைக் குழுவான BTS,...

44520176 vijay33
செய்திகள்இந்தியா

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: த.வெ.க. தலைவர் விஜய்க்கு சி.பி.ஐ. அழைப்பாணை – ஜனவரி 12-ல் விசாரணை!

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) பிரசாரத்தின் போது...

gold 5
செய்திகள்இலங்கை

தொடர்ந்து உயரும் தங்கம்: இன்றும் பவுணுக்கு 3,000 ரூபாய் அதிகரிப்பு – புதிய விலைப் பட்டியல் இதோ!

இலங்கையில் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாகத் தொடர்ச்சியான ஏற்றத்தைக் கண்டு வருகின்றது. நேற்று (05)...

1739116331 energy min
இலங்கைஏனையவைசெய்திகள்

மூன்று ஆண்டுகளில் 30% கட்டணக் குறைப்பு: நாடாளுமன்றத்தில் அமைச்சர் குமார ஜயகொடி உறுதி!

வாக்குறுதியளித்தபடி மூன்று ஆண்டுகளுக்குள் மின்சாரக் கட்டணத்தை மூன்றில் ஒரு பங்காகக் குறைக்கும் இலக்கை நோக்கி அரசாங்கம்...