இலங்கைசெய்திகள்

நீதித்துறை முறைமை மீதான தேவையற்ற விமர்சனங்கள் குறித்த ஒன்றுகூடல் இன்று

24 6680da3d2ea22yyyyyyyyyyyyyyy
Share

நீதித்துறை முறைமை மீதான தேவையற்ற விமர்சனங்கள் குறித்த ஒன்றுகூடல் இன்று

நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் நீதவான்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பான ஜேஎஸ்ஏ என்ற இலங்கை நீதிச் சேவை சங்கம், நீதித்துறை முறைமை மீதான தேவையற்ற விமர்சனங்கள் குறித்து விவாதிப்பதற்காக விசேட பொதுக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

இந்தக் கூட்டம் இன்று (30.06.2024) கொழும்பில் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

2024 ஜூன் 9 அன்று நீதி அமைச்சர் மற்றும் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற விவாதத்தின் போது ஆற்றிய உரைகள் தொடர்பில் ஆராய்வதற்காகவே இந்தக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் உரையை கண்டித்தமைக்காக, ஜேஎஸ்ஏவின் முக்கிய அதிகாரிகளை நாடாளுமன்றத்தின் அதிகாரங்கள் மற்றும் சிறப்புரிமைகள் குழுவிற்கு அழைக்குமாறு சபாநாயகரிடம் உத்தியோகபூர்வமாக கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

ஜேஎஸ்ஏயின் கருத்துக்கள் தனது நாடாளுமன்ற சிறப்புரிமைகளை மீறுவதாக குற்றம் சுமத்தியே அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

இதேவேளை, இலங்கை சட்டத்தரணிகள் சங்கமும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது நாடாளுமன்ற சிறப்புரிமைகளின் பாதுகாப்பின் கீழ் அறிக்கைகளை வெளியிடுவதன் மூலம் நீதித்துறை அல்லது நீதிச் சேவை ஆணைக்குழுவின் செயற்பாடுகளில் தலையிடக்கூடாது என்று கோரியுள்ளது.

Share
Related Articles
29 2
உலகம்செய்திகள்

செங்கடலில் அடுத்தடுத்து அமெரிக்க போர் விமானங்கள் விபத்து: உயிர் தப்பிய விமானிகள்!

செங்கடலில் அமெரிக்க போர் விமானம் ஒன்று விமானம் தாங்கி கப்பலில் தரையிறங்கும் போது ஏற்பட்ட விபத்தில்...

26 4
உலகம்செய்திகள்

பெரிய அறிவிப்பு ஒன்று விரைவில் வெளியாகும்: ட்ரம்ப் செய்தியால் பரபரப்பாகும் இணையம்

அதிரவைக்கும் மிகப்பெரிய அறிவிப்பு ஒன்று விரைவில் வெளியாகும் என ட்ரம்ப் கூறியுள்ள விடயத்தால் இணையம் பரபரப்பாகியுள்ளது....

27 3
உலகம்செய்திகள்

அணு ஆயுத நாடுகள் 2024: இந்தியா எங்கே உள்ளது? – அதிர்ச்சி தரும் உண்மைகள்!

இந்தியா-பாகிஸ்தான் இடையே அதிகரித்து வரும் போர் பதற்றம் இருநாட்டு மக்களிடையே உச்சக்கட்ட விழிப்பு நிலையை ஏற்படுத்தியுள்ள...

28 3
உலகம்செய்திகள்

போரில் பாகிஸ்தான் வென்றால் அந்த இந்திய நடிகை வேண்டும் – மதகுரு சர்ச்சை பேச்சு

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர்....