24 6680da3d2ea22yyyyyyyyyyyyyyy
இலங்கைசெய்திகள்

நீதித்துறை முறைமை மீதான தேவையற்ற விமர்சனங்கள் குறித்த ஒன்றுகூடல் இன்று

Share

நீதித்துறை முறைமை மீதான தேவையற்ற விமர்சனங்கள் குறித்த ஒன்றுகூடல் இன்று

நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் நீதவான்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பான ஜேஎஸ்ஏ என்ற இலங்கை நீதிச் சேவை சங்கம், நீதித்துறை முறைமை மீதான தேவையற்ற விமர்சனங்கள் குறித்து விவாதிப்பதற்காக விசேட பொதுக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

இந்தக் கூட்டம் இன்று (30.06.2024) கொழும்பில் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

2024 ஜூன் 9 அன்று நீதி அமைச்சர் மற்றும் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற விவாதத்தின் போது ஆற்றிய உரைகள் தொடர்பில் ஆராய்வதற்காகவே இந்தக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் உரையை கண்டித்தமைக்காக, ஜேஎஸ்ஏவின் முக்கிய அதிகாரிகளை நாடாளுமன்றத்தின் அதிகாரங்கள் மற்றும் சிறப்புரிமைகள் குழுவிற்கு அழைக்குமாறு சபாநாயகரிடம் உத்தியோகபூர்வமாக கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

ஜேஎஸ்ஏயின் கருத்துக்கள் தனது நாடாளுமன்ற சிறப்புரிமைகளை மீறுவதாக குற்றம் சுமத்தியே அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

இதேவேளை, இலங்கை சட்டத்தரணிகள் சங்கமும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது நாடாளுமன்ற சிறப்புரிமைகளின் பாதுகாப்பின் கீழ் அறிக்கைகளை வெளியிடுவதன் மூலம் நீதித்துறை அல்லது நீதிச் சேவை ஆணைக்குழுவின் செயற்பாடுகளில் தலையிடக்கூடாது என்று கோரியுள்ளது.

Share
தொடர்புடையது
15 6
உலகம்செய்திகள்

அமெரிக்க உளவுத்தகவல் கசிவு! விசாரணைக்கு தயாராகும் ட்ம்பின் ஆதரவாளர்

ஈரானின் அணுசக்தி தளங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை என்று அமெரிக்க உளவுத்துறையின் முதற்கட்ட மதிப்பீட்டில் வெிளியடப்பட்டமைக்கு மத்திய...

16 6
இந்தியாசெய்திகள்

41 ஆண்டுகளுக்குப் பின்னர் விண்வெளி சென்ற இந்தியா வீரர்

இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு 41 ஆண்டுகளுக்கு பின்னர் விண்வெளி வீரர்களில் ஒருவரான சுபான்ஷு சுக்லா அனுப்பப்பட்டுள்ளார். மனிதர்களை...

14 6
இலங்கைசெய்திகள்

இஸ்ரேலின் ஜனநாயக விரோத செயற்பாடு: விமல் வீரவன்சவின் குற்றச்சாட்டு

அமெரிக்காவின் முறையற்ற செயற்பாட்டை கண்டிக்கும் தற்றுணிவு அரசாங்கத்துக்கு கிடையாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல்...

12 9
இலங்கைசெய்திகள்

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டு!

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள...