tamilni 456 scaled
இலங்கைசெய்திகள்

இரண்டு இடைக்கால சபைகளை கலைத்து வர்த்தமானி அறிவித்தல்

Share

இரண்டு இடைக்கால சபைகளை கலைத்து வர்த்தமானி அறிவித்தல்

தேசிய விளையாட்டு சங்கங்கள் இரண்டின் இடைக்கால சபைகளைக் கலைக்கும் வர்த்தமானி அறிவித்தல் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவினால் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த வருடம் ஜூலை மாதம் 28 ஆம் திகதி, அப்போது விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த ரொஷான் ரணசிங்க, கராத்தே தோ சம்மேளனத்தின் பதிவை இடைநிறுத்தி, சங்கத்தின் பணிகளை தற்காலிகமாக நிர்வகிப்பதற்கான இடைக்கால சபையை நியமித்திருந்தார்.

அத்துடன், இலங்கை மோட்டார் விளையாட்டு சங்கத்தின் பதிவும் கடந்த ஆகஸ்ட் மாதம் 9 ஆம் திகதி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டு, முன்னாள் அமைச்சர் ரொஷான் ரணசிங்க இடைக்கால கட்டுப்பாட்டுச் சபையொன்றை நியமிக்க ஏற்பாடு செய்திருந்தார்.

இந்நிலையில் தற்போதைய விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ குறித்த இரண்டு இடைக்கால கட்டுப்பாட்டு சபைகளையும் கலைக்கும் வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை நேற்று(28.01.2024) வெளியிட்டுள்ளார்.

கராத்தே தோ சம்மேளனம் மற்றும் இலங்கை மோட்டார் விளையாட்டு சங்கத்தின் பணிகளை கடந்த தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்குமாறும் ஹரின் பெர்னாண்டோ உத்தரவிட்டுள்ளார்.

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...