tamilni 456 scaled
இலங்கைசெய்திகள்

இரண்டு இடைக்கால சபைகளை கலைத்து வர்த்தமானி அறிவித்தல்

Share

இரண்டு இடைக்கால சபைகளை கலைத்து வர்த்தமானி அறிவித்தல்

தேசிய விளையாட்டு சங்கங்கள் இரண்டின் இடைக்கால சபைகளைக் கலைக்கும் வர்த்தமானி அறிவித்தல் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவினால் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த வருடம் ஜூலை மாதம் 28 ஆம் திகதி, அப்போது விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த ரொஷான் ரணசிங்க, கராத்தே தோ சம்மேளனத்தின் பதிவை இடைநிறுத்தி, சங்கத்தின் பணிகளை தற்காலிகமாக நிர்வகிப்பதற்கான இடைக்கால சபையை நியமித்திருந்தார்.

அத்துடன், இலங்கை மோட்டார் விளையாட்டு சங்கத்தின் பதிவும் கடந்த ஆகஸ்ட் மாதம் 9 ஆம் திகதி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டு, முன்னாள் அமைச்சர் ரொஷான் ரணசிங்க இடைக்கால கட்டுப்பாட்டுச் சபையொன்றை நியமிக்க ஏற்பாடு செய்திருந்தார்.

இந்நிலையில் தற்போதைய விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ குறித்த இரண்டு இடைக்கால கட்டுப்பாட்டு சபைகளையும் கலைக்கும் வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை நேற்று(28.01.2024) வெளியிட்டுள்ளார்.

கராத்தே தோ சம்மேளனம் மற்றும் இலங்கை மோட்டார் விளையாட்டு சங்கத்தின் பணிகளை கடந்த தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்குமாறும் ஹரின் பெர்னாண்டோ உத்தரவிட்டுள்ளார்.

 

Share
தொடர்புடையது
articles2FY0GVgzTw5z9g03mi2iHS
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொலன்னறுவையில் கொடூரம்: கோடரித் தாக்குதலுக்குள்ளான 17 வயதுச் சிறுமி உயிரிழப்பு!

பொலன்னறுவை மாவட்டம் தம்பால பகுதியில் பக்கத்து வீட்டு இளைஞனால் கோடரியால் தாக்கப்பட்ட 17 வயதுடைய பாடசாலை...

26 6982fe7a72190
செய்திகள்உலகம்

எப்ஸ்டீன் விவகாரம்: பிரித்தானிய பிரபுக்கள் சபையிலிருந்து பீட்டர் மெண்டல்சன் அதிரடி விலகல்!

  பிரித்தானியாவின் முன்னாள் அமைச்சரும், அமெரிக்காவிற்கான முன்னாள் தூதருமான பீட்டர் மெண்டல்சன் (Peter Mandelson) மீது...

english lokshahi 2026 02 04 1vn53foh Mumbai
செய்திகள்இந்தியா

மும்பை விமான நிலையத்தில் நடுக்கம்: இரண்டு ஏர்பஸ் விமானங்கள் மோதி விபத்து!

இந்தியாவின் மிக முக்கியமான விமான நிலையங்களில் ஒன்றான மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான...

image 26ca8f03e9
செய்திகள்அரசியல்இலங்கை

இந்த அரசாங்கம் மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தது அல்ல – நம்பிக்கையூட்டும் வாசுதேவ நாணயக்கார!

தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் அதன் பின்னணி குறித்து முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார நேற்று...