இலங்கைசெய்திகள்

சஜித்துக்கும் அனுரவுக்கும் இடையிலான விவாதம் : புதிய திகதிகளை பரிந்துரைத்த சஜித் தரப்பு

Share
24 664abc6a7e925
Share

சஜித்துக்கும் அனுரவுக்கும் இடையிலான விவாதம் : புதிய திகதிகளை பரிந்துரைத்த சஜித் தரப்பு

தமது கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் (Sajith Premadasa) தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்கவுக்கும் (Anura Kumara Dissanayaka) இடையிலான விவாதத்துக்கு ஐக்கிய மக்கள் சக்தி புதிய திகதிகளை பரிந்துரைத்துள்ளது

முன்னதாக தேசிய மக்கள் சக்தி சில திகதிகளை பரிந்துரைத்துள்ள போதும் அதற்கு உரிய பதில்கள் வழங்கப்படாத நிலையில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஜெயமஹா இந்த புதிய திகதிகளை பரிந்துரைத்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் செயற்குழு உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸவிற்கு எழுதிய கடிதத்தில் அவர் இந்த திகதிகளை பரிந்துரைத்துள்ளார்.

இதன்படி, இரண்டு கட்சி தலைவர்களுக்கும் இடையிலான விவாதம் ஜூன் 3, 4, 5, 6ஆம் அல்லது 7ஆம் திகதிகளிலும், பொருளாதார நிபுணர்கள் இடையேயான விவாதம் மே 27, 28, 29, 30 அல்லது 31ஆம் திகதிளிலும் நடத்தப்படலாம் என்று நளின் பண்டார குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், குறித்த பரிந்துரைகளுக்கான பதில்கள் தேசிய மக்கள் சக்தியிடம் இருந்து எதிர்பார்க்கப்படுகின்றன.

Share
Related Articles
25 1
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு கோடியே 72லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு ​கோடியே 72 லட்சத்து 96ஆயிரத்து 330 ​பேர் வாக்களிக்கத்...

24 1
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் ஏற்படுத்திய பயணி கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

23 2
இலங்கைசெய்திகள்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்! ​தொடர்புடைய மாணவர்கள் ஐவருக்கு மனஅழுத்தம்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரத்தில் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் ஐந்து மாணவிகள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

22 2
இலங்கைசெய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அனைத்து வங்கிகளும் நாளை காலை 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என இலங்கை வங்கி...