rtjy 56 scaled
இலங்கைசெய்திகள்

தொடருந்து சேவைகள் வழமைக்கு

Share

தொடருந்து சேவைகள் வழமைக்கு

தொடருந்து கட்டுப்பாட்டாளர்கள் சங்கத்தினரின் பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டுள்ள நிலையில், இன்று முதல் தொடருந்து சேவைகள் வழமைக்கு திரும்பும் என தொடருந்து கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், அலுவலக தொடருந்து சேவைகள் இன்று மாலை வழமைபோல முன்னெடுக்கப்படுமென அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.

மாளிகாவத்தை தொடருந்து சாலையின் பிரதி கட்டுப்பாட்டாளர் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று காலை முதல் தொடருந்து கட்டுப்பாட்டாளர்கள் சங்கத்தினர் பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்திருந்தனர்.

இந்தநிலையில், போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ணவுடன் நேற்று முற்பகல் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில், ஏற்பட்ட இணக்கப்பாடுகளுக்கு அமைய, குறித்த பணிப்புறக்கணிப்பை கைவிடுவதாக தொடருந்து கட்டுப்பாட்டாளர் சங்கம் அறிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
13 12
உலகம்செய்திகள்

தமிழின அழிப்பை மறுப்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை! பிரம்டன் மேயர் ஆவேசப் பேச்சு

இலங்கையில் தமிழர்கள் இனவழிப்பு செய்யப்படவில்லை என்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை என பிரம்டன் முதல்வர் பட்ரிக் பிரவுண்...

12 13
இலங்கைசெய்திகள்

இந்திய – பாகிஸ்தான் போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்து இலங்கையின் நிலைப்பாடு

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் பாராட்டி ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க...

11 12
இலங்கைசெய்திகள்

சிங்கள நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி

வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு...

10 15
இலங்கைசெய்திகள்

இறம்பொடை பேருந்து விபத்துக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணை

கொத்மலை கரண்டியெல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்துக்கான காரணம் சாரதியின் அலட்சியமா அல்லது பேருந்தின் தொழில்நுட்பக்...