tamilni 125 scaled
இலங்கைசெய்திகள்

இராஜாங்க அமைச்சரின் மின் இணைப்பை துண்டித்த அதிகாரிகள்

Share

இராஜாங்க அமைச்சரின் மின் இணைப்பை துண்டித்த அதிகாரிகள்

இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் அலுவலக விடுதிக்கு 5500 ரூபாய் மின்சார நிலுவையை செலுத்தவில்லை என தெரிவித்து மின்சார சபையால் வழங்கப்படும் மேலதிக பணத்திற்காக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

மின்சார நிலுவை 40 ஆயிரத்திற்கு மேல் இருந்தால் மாத்திரமே மின் துண்டிப்பு செய்வதாக மின்சார சபை அதிகாரிகள் நேற்று(06.02.2024) நடைபெற்ற அபிவிருத்தி குழு கூட்டத்தில் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் விடுதிக்கு 5500 ரூபாய் கட்டவில்லை என்பதற்காக மின் இணைப்பை துண்டிக்கப்பட்ட நிலையில் அதற்கான இணைப்பு கட்டணத்தையும் கட்டியதாக இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு – செங்கலடி பிரதேசத்தில் நேற்று(06) நடைபெற்ற அபிவிருத்திக் குழு கூட்டத்தில் மின்சார சபையின் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயப்பட்ட போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “மின்சார சபை சட்டங்கள் இருந்தாலும் ஏழை எளிய மக்களிடம் மனிதாபிமான முறையில் நடந்துகொள்ள வேண்டும்.

நீங்கள் நாற்பதாயிரத்திற்கு மேல் நிலுவை இருந்தால் மாத்திரமே மின் இணைப்பை துண்டிப்பதாக கூறுகின்றீர்கள் ஆனால் ஏழை எளிய மக்களின் வீடுகளில் ஐந்தாயிரம் ரூபாய் கட்டவில்லை என்பதற்காக மின் இணைப்பை துண்டித்து விட்டு அதனை மீள் இணைப்பு செய்வதற்காக கல்லடிக்கு வரவேண்டும் என்று கூறுவதும் மீள் இணைப்பு கட்டணமாக மூவாயிரம் ரூபாய் அறவிடுவதும் எவ்வளவு மோசமான செயல்.

அண்மையில் ஒரு ஏழைத் தாயார் மின் இணைப்பை துண்டிக்க வந்த அதிகாரியிடம் ‘பரீட்சை நடக்கிறது பிள்ளை படிக்க வேண்டும் மின் இணைப்பை துண்டிக்க வேண்டாம் காதில் இருக்கும் தோட்டை ஈடுவைத்துவிட்டு வருகிறேன் கொஞ்சம் பொறுங்கள்’ என்று கூறியும் வந்த அதிகாரி மின் இணைப்பை துண்டித்து விட்டு சென்றிருக்கிறார். எனவே கொஞ்சம் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ளுங்கள்” என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...