24 662f3fda2887d
இலங்கைசெய்திகள்

நாட்டை விட்டு வெளியேறிய வைத்தியர்கள்: தாமதமாகும் நடவடிக்கை

Share

நாட்டை விட்டு வெளியேறிய வைத்தியர்கள்: தாமதமாகும் நடவடிக்கை

சிறிலங்கா சுகாதார அமைச்சின் அனுமதியின்றி நாட்டை விட்டு வெளியேறிய சுமார் 350 விசேட வைத்தியர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ள போதிலும், அது பல மாதங்களாக தாமதமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனவரி 2022 முதல் இதுவரை 300 முதல் 350 வரையான விசேட மருத்துவர்கள் சுகாதார அமைச்சின் அனுமதியின்றி வெளிநாடு சென்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழ் – சிங்கள புத்தாண்டுக்கு பின்னரும் ஏழு விசேட வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மொனராகலை, மஹியங்கனை, ஹம்பாந்தோட்டை போன்ற வைத்தியசாலைகளில் பணியாற்றிய வைத்தியர்களே இவ்வாறு வெளிநாடு சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

விசேட வைத்தியர் ஒருவர் வெளிநாடு செல்லும்போது, ​​குறித்த வைத்தியர் விடுப்புக்கு முறையான அனுமதி அளித்துள்ளாரா என்பதை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் பரிசோதிக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

விசா வழங்கும் போது சட்ட நிலைமையை பரிசோதிக்க வேண்டிய போதிலும், நாட்டை விட்டு வெளியேறிய சில விசேட வைத்தியர்கள் சுகாதார அமைச்சின் சட்ட அனுமதியின்றி, முறையான விடுமுறை அனுமதியின்றி வெளிநாடு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வெளிநாடுகளுக்குச் சென்ற விசேட வைத்தியர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட சுகாதார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளுக்கு அறிவித்தும் இதுவரையில் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...