24 662f3fda2887d
இலங்கைசெய்திகள்

நாட்டை விட்டு வெளியேறிய வைத்தியர்கள்: தாமதமாகும் நடவடிக்கை

Share

நாட்டை விட்டு வெளியேறிய வைத்தியர்கள்: தாமதமாகும் நடவடிக்கை

சிறிலங்கா சுகாதார அமைச்சின் அனுமதியின்றி நாட்டை விட்டு வெளியேறிய சுமார் 350 விசேட வைத்தியர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ள போதிலும், அது பல மாதங்களாக தாமதமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனவரி 2022 முதல் இதுவரை 300 முதல் 350 வரையான விசேட மருத்துவர்கள் சுகாதார அமைச்சின் அனுமதியின்றி வெளிநாடு சென்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழ் – சிங்கள புத்தாண்டுக்கு பின்னரும் ஏழு விசேட வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மொனராகலை, மஹியங்கனை, ஹம்பாந்தோட்டை போன்ற வைத்தியசாலைகளில் பணியாற்றிய வைத்தியர்களே இவ்வாறு வெளிநாடு சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

விசேட வைத்தியர் ஒருவர் வெளிநாடு செல்லும்போது, ​​குறித்த வைத்தியர் விடுப்புக்கு முறையான அனுமதி அளித்துள்ளாரா என்பதை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் பரிசோதிக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

விசா வழங்கும் போது சட்ட நிலைமையை பரிசோதிக்க வேண்டிய போதிலும், நாட்டை விட்டு வெளியேறிய சில விசேட வைத்தியர்கள் சுகாதார அமைச்சின் சட்ட அனுமதியின்றி, முறையான விடுமுறை அனுமதியின்றி வெளிநாடு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வெளிநாடுகளுக்குச் சென்ற விசேட வைத்தியர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட சுகாதார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளுக்கு அறிவித்தும் இதுவரையில் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
world 9
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

இலங்கையில் மழை மற்றும் கடும் வெப்பம்: வானிலை ஆய்வு மையத்தின் முக்கிய எச்சரிக்கை!

இலங்கையின் பல மாகாணங்களில் இன்று (ஏப்ரல் 06, 2026) பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை...

world 8
உலகம்செய்திகள்

லெபனானில் இஸ்ரேல் வான் தாக்குதல்: ஈஸ்டர் தினத்தில் 4 வயது குழந்தை உட்பட 7 பேர் பலி!

மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், தெற்கு லெபனானின் கஃபர்ஹதா (Kafr Hatta) கிராமத்தின்...

world 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹோமகமவில் இன்று 12 மணிநேர நீர்வெட்டு!

தற்போது நிலவி வரும் கடும் வறண்ட வானிலை காரணமாக, ஹோமகம மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில்...

world 6
செய்திகள்உலகம்

உள்கட்டமைப்பைத் தாக்கினால் பதிலடி: டிரம்பிற்கு ஈரான் கடும் எச்சரிக்கை!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கடுமையான மிலிட்டரி அச்சுறுத்தல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஈரானின் உள்கட்டமைப்புகள்...