24 6755583c21351
இலங்கைசெய்திகள்

இன்று பிறந்தநாளை கொண்டாடும் இயக்குனர் பா.ரஞ்சித் சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா

Share

இன்று பிறந்தநாளை கொண்டாடும் இயக்குனர் பா.ரஞ்சித் சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா

சென்னை 28 படத்தில் வெங்கட் பிரபு உதவி இயக்குனராக பணியாற்றியவர் பா.இரஞ்சித். அப்படத்தை தொடர்ந்து 2012ம் ஆண்டு அட்டகத்தி திரைப்படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்தார்.

முதல் படத்திலேயே மக்களின் கவனத்தை பெற்றார், அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து கார்த்தியை வைத்து மெட்ராஸ் படத்தை இயக்கினார். அந்த படமும் ரசிகர்கள் மத்தியில் மாஸ் ஹிட் அடித்து அவருக்கு இயக்குனர் அந்தஸ்தை உயர்த்தியது.

அப்படம் அவருக்கு எந்த அளவு வரவேற்பை கொடுத்துள்ளது என்றால் ரஜினி படத்தை இயக்கும் வாய்ப்பை பெரும் அளவிற்கு ஒரு முன்னணி இடத்திற்கு சென்றார்.

ரஜினியை வைத்து கபாலி, காலா என இரண்டு ஹிட் படங்கள் கொடுத்தார். பா.இரஞ்சித் படங்களில் அடித்தட்டு மக்களின் வலியை ஆணித்தனமாக பேசி இருப்பார். அந்த வகையில், கடைசியாக விக்ரம் நடிப்பில் தங்கலான் படத்தை இயக்கி வெளியிட்டார்.

இந்நிலையில், இன்று தனது 42 – வது பிறந்தநாளை கொண்டாடும் பா.இரஞ்சித்தின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

ஒரு படத்திற்கு ரூ. 10 கோடி வரை சம்பளம் வாங்கும் ரஞ்சித் சில படங்களை தயாரித்தும் வருகிறார். அதன்படி, இவருக்கு சுமார் ரூ. 43 கோடி வரை சொத்து இருப்பதாக கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
08 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு போர் சூழல்: ஜெய்சங்கர் – விஜித ஹேரத் இடையே முக்கிய பேச்சுவார்த்தை!

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கிடையில்...

07 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முன்னாள் எம்.பி. சஜின் வாஸ் குணவர்தனவின் பிணை மனு நிராகரிப்பு: மார்ச் 31 வரை விளக்கமறியல்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவினால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை கொழும்பு நீதவான்...

06 20
உலகம்செய்திகள்

ஈரானுடனான பகையை முடிக்கத் திட்டம்: 5 நாட்களுக்குத் தாக்குதல்களை ஒத்திவைத்தார் ட்ரம்ப்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிரமான மோதல்களுக்கு “முழுமையான மற்றும் நிலையான தீர்வை” எட்டும் நோக்கில்,...

05 22
உலகம்செய்திகள்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் எச்சரிக்கை தேவை: ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் கோவ்சாரி!

அமெரிக்காவுடன் எந்தவொரு இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடுவதற்கு முன்பாக, ஈரானிய உயர் அதிகாரிகள் மிகவும் “விவேகமாகச் சிந்திக்க...