tamilni 338 scaled
இலங்கைசெய்திகள்

கொழும்பு – யாழ்ப்பாணத்திற்கான நேரடி உள்நாட்டு விமான சேவைகள்

Share

கொழும்பு – யாழ்ப்பாணத்திற்கான நேரடி உள்நாட்டு விமான சேவைகள்

கொழும்புக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையிலான நேரடி உள்நாட்டு விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

அத்துடன் திருகோணமலை மற்றும் மட்டக்களப்புக்கு விமான சேவையை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதன் முகாமைத்துவ பணிப்பாளர் நளின் பெரேரா தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்கள் சந்திப்பொன்றில் நேற்று (14.02.2024) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,

எங்கள் உள்நாட்டு விமானப் போக்குவரத்துத் தொடர்பைப் பேணுவது எங்களுக்கு இன்றியமையாததாக இருந்தது. (14) முதல் கொழும்பு இரத்மலானையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு நேரடி விமான சேவையை மீண்டும் ஆரம்பிக்க உள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும், திருகோணமலை மற்றும் மட்டக்களப்புக்கான விமான சேவைகள் இரத்மலானையிலிருந்து ஆரம்பிக்கப்படும். இந்த விமானங்கள் டிபி ஏவியேஷன் மூலம் இயக்கப்படுகிறது.

வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரத்மலானையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு விமானம் மூலம் பயணிக்க முடியும் என்பதுடன் இதற்கு மிகக் குறைந்த கட்டணமே வசூலிக்கப்படுகிறது.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கான ஒரு வழி பயணக்கட்டணம் ரூ. 30,000 ஆக அமைந்திருப்பதுடன் , இரு வழி பயணக்கட்டணம் ரூ. 58,500 ஆக காணப்படும் என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
19 4
செய்திகள்உலகம்

ஈரான் போர் பதற்றங்களுக்கு மத்தியில்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்காக வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற சிறப்புப் பிரார்த்தனை!

ஈரானுடனான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அந்நாட்டின் பாதுகாப்புப்...

20 6
செய்திகள்உலகம்

பாபா வாங்காவின் உலகப்போர் கணிப்புடன் ஒத்துப் போகிறதா தற்போதைய ஈரான்-இஸ்ரேல் மோதல்? அச்சத்தில் உலக நாடுகள்!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல், புகழ்பெற்ற பல்கேரியத் தீர்க்கதரிசி பாபா வாங்கா...

21 6
செய்திகள்உலகம்

ஈரான் கப்பல் மற்றும் பணியாளர்களை மீட்ட இலங்கை: ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

இலங்கை கடற்பரப்பில் அண்மையில் தாக்குதலுக்கு உள்ளான ஈரானியக் கப்பல் மற்றும் அதில் இருந்த பணியாளர்களை மீட்பதற்காக...

24 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அஸ்வெசும பயனாளிகளின் தகவல்கள் புதுப்பிப்பு: மார்ச் 28 வரை கணக்கெடுப்பு பணிகள் தீவிரம்!

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் (2022/2023) விண்ணப்பித்த பயனாளிகள் மற்றும் நன்மைகளைப் பெறாத விண்ணப்பதாரர்கள்...