22 14
இலங்கைசெய்திகள்

அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சி விவகாரம் குறித்து விளக்கமளித்த திகாம்பரம்

Share

அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சி விவகாரம் குறித்து விளக்கமளித்த திகாம்பரம்

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சியின்போது, வேலு குமார் (M. Velu Kumar) தவறான குற்றச்சாட்டுகளை முன்வைத்தமை காரணமாகவே தான் கோபமடைந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் பி திகாம்பரம் (Palani Digambaram) கூறியுள்ளார்.

தமிழ் முற்போக்குக் கூட்டணியைச் சேர்ந்த வேலு குமார் அண்மையில் அதிலிருந்து விலகி, ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்கத் தீர்மானித்தார்,

அதேசமயம் திகாம்பரம் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கிறார்.

இந்தநிலையில் வேலு குமார், தம்மீது பொய்யான குற்றச்சாட்டுகளை கூறியமையினாலேயே தாம் கோபமடைந்ததாக குறிப்பிட்டுள்ள திகாம்பரம், உண்மையான மக்கள் தங்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படும்போது நிதானத்தை இழக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், குறித்த சம்பவம் ஆர்வமுள்ள தரப்பினரால் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட ஒன்றாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
MediaFile 2 1
செய்திகள்இலங்கை

இலங்கை வானிலை அறிக்கை: பிற்பகலில்  மழைக்கு வாய்ப்பு – சில இடங்களில் 75 மி.மீ வரை பலத்த மழை வீழ்ச்சி!

நாட்டின் பல பகுதிகளில் பெரும்பாலும் மழையற்ற வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (நவம்பர்...

large pli 2 219454
செய்திகள்உலகம்

பிலிப்பைன்ஸ், வியட்நாமைத் தாக்கிய கல்மேகி சூறாவளி: பலி 200-ஐ தாண்டியது – பிலிப்பைன்ஸில் அவசர நிலை அறிவிப்பு!

மத்திய பிலிப்பைன்ஸை கடுமையாகத் தாக்கிய கல்மேகி (Kalmaegi) சூறாவளியில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 188ஆக...

25 690cd7c953777
செய்திகள்உலகம்

மிஸ் பிரபஞ்ச அழகிப் போட்டியில் சர்ச்சை: மெக்சிகோ அழகி பாத்திமா போஷை ‘முட்டாள்’ எனக் கூறி அவமானம் – போட்டியாளர்கள் வெளிநடப்பு!

தாய்லாந்தில் எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள 2025ஆம் ஆண்டுக்கான மிஸ் பிரபஞ்ச அழகிப் போட்டியை முன்னிட்டு,...