24 6646df9132734
இலங்கைசெய்திகள்

வாகனங்களை ஒப்படைக்க காலம் தாழ்த்தும் டயனா

Share

வாகனங்களை ஒப்படைக்க காலம் தாழ்த்தும் டயனா

முன்னாள் ராஜாங்க அமைச்சர் டயனா கமகே இன்னமும் நான்கு வாகனங்களை மீள ஒப்படைக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

பிரித்தானிய பிரஜை என்ற காரணத்தினால் நாடாளுமன்ற உறுப்பினராக அங்கம் வகிக்கத் தகுதியற்றவர் என அண்மையில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது.

இதன்படி, டயனா கமகேவின் நாடாளுமன்ற உறுப்புரிமை ரத்து செய்யப்பட்டது.

ராஜாங்க அமைச்சராக பதவி வகித்த காலத்தில் வழங்கப்பட்ட வாகனங்களை உடனடியாக ஒப்படைக்குமாறு டயனாவிற்கு, சுற்றுலாத்துறை அமைச்சு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

எனினும் நேற்றைய தினம் வரையில் இந்த வாகனங்கள் சுற்றுலாத்துறை அமைச்சிடம் ஒப்படைக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

டிஸ்கவரி (Discovery) ரக ஜீப், டபள் கெப் வாகனம், ப்ராடோ (Prado) ஜீப் மற்றம் நிசான் (Nissan) ரக கார் என்பனவே இன்னமும் ஒப்படைக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இவற்றில் டபள் கெப் ரக வாகனம் விபத்து ஒன்று காரணமாக குருணாகல் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Share
தொடர்புடையது
19 4
செய்திகள்உலகம்

ஈரான் போர் பதற்றங்களுக்கு மத்தியில்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்காக வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற சிறப்புப் பிரார்த்தனை!

ஈரானுடனான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அந்நாட்டின் பாதுகாப்புப்...

20 6
செய்திகள்உலகம்

பாபா வாங்காவின் உலகப்போர் கணிப்புடன் ஒத்துப் போகிறதா தற்போதைய ஈரான்-இஸ்ரேல் மோதல்? அச்சத்தில் உலக நாடுகள்!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல், புகழ்பெற்ற பல்கேரியத் தீர்க்கதரிசி பாபா வாங்கா...

21 6
செய்திகள்உலகம்

ஈரான் கப்பல் மற்றும் பணியாளர்களை மீட்ட இலங்கை: ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

இலங்கை கடற்பரப்பில் அண்மையில் தாக்குதலுக்கு உள்ளான ஈரானியக் கப்பல் மற்றும் அதில் இருந்த பணியாளர்களை மீட்பதற்காக...

24 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அஸ்வெசும பயனாளிகளின் தகவல்கள் புதுப்பிப்பு: மார்ச் 28 வரை கணக்கெடுப்பு பணிகள் தீவிரம்!

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் (2022/2023) விண்ணப்பித்த பயனாளிகள் மற்றும் நன்மைகளைப் பெறாத விண்ணப்பதாரர்கள்...