இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க வழக்கில் திருப்பம்!
இலங்கைசெய்திகள்

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க வழக்கில் திருப்பம்!

Share

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க வழக்கில் திருப்பம்!

அவுஸ்திரேலியாவில் பாலியல் பலாத்கார குற்றச்சாட்டில் சிக்கியுள்ள இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகவுக்கு நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட பிணை நிபந்தனைகள் தளர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 8 மாதங்களுக்கும் மேலாக அவுஸ்திரேலியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தனுஷ்க குணதிலக்கவின் பிணை நிபந்தனைகள் சிட்னி டவுனிங் சென்டர் மாவட்ட நீதிமன்றத்தினால் இவ்வாறு தளர்த்தப்பட்டுள்ளன.

இதையடுத்து அவர் அவுஸ்திரேலியாவுக்குள் தடையின்றி பயணம் செய்ய முடியுமென நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இதன் மூலம் தனுஷ்க குணதிலக்க அவுஸ்திரேலியாவுக்குச் பயணிக்கவும், அவுஸ்திரேலியாவிற்குள் விமானத்தில் பயணிக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, அவர் ஒரு மாதத்தில் 2 தடவைகள் அவுஸ்திரேலியாவிற்குள் விமானத்தில் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும், அவர் அவுஸ்திரேலியாவுக்குள் பயணிக்க விரும்பினால், அவர் பயணிக்கும் காலம், இடம், பாதை என்பனவற்றை குறைந்தது 48 மணித்தியாலங்களுக்கு முன்னரே பொலிஸாருக்கு தெரிவிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
MediaFile 6
செய்திகள்இலங்கை

நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்: மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு அனுதாபப் பிரேரணைகள் இன்று இடம்பெறுகிறது!

சபாநாயகர் மருத்துவர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் இன்றைய (அக்டோபர் 24, 2025) நாளுக்கான நாடாளுமன்ற அமர்வுகள்...

25 68fa9219d9e29 1
செய்திகள்உலகம்

ஜெர்மனியில் குழப்பம்: ராணுவப் பயிற்சி குறித்த தகவல் இல்லாததால், ராணுவ வீரரை சுட்டுக் காயப்படுத்திய காவல்துறை!

ஜெர்மனியின் பவேரியா மாகாணத்தில் உள்ள மியூனிக் நகரில், பொதுமக்கள் முகமூடி அணிந்த சிலர் கட்டிடங்களுக்குள் சென்று...

25 68fac88cc2a44
செய்திகள்இலங்கை

2026 பட்ஜெட் உரைக்கு முன்னதாக நாடாளுமன்றத்தில் 3 நாட்களுக்கு விசேட பாதுகாப்பு பரிசோதனை!

அடுத்த ஆண்டுக்கான (2026) பட்ஜெட் உரைக்கு முன்னதாக, அடுத்த மாதம் (நவம்பர்) மூன்று நாட்களுக்கு நாடாளுமன்ற...

25 67be1398d1cd3 770x470 1
செய்திகள்இலங்கை

கணேமுல்ல சஞ்சீவ கொலை: இஷாரா தப்பிச் சென்ற படகை செலுத்திய யாழ் இளைஞன் அதிரடி கைது!

கணேமுல்ல சஞ்சீவ கொலையுடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி இந்தியாவிற்குத் தப்பிச் செல்வதற்குப் பயன்படுத்தப்பட்ட...