19 9
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி வேட்பாளராக தம்மிக்க பெரேரா விலகியமை தொடர்பில் வெளியான காரணம்

Share

ஜனாதிபதி வேட்பாளராக தம்மிக்க பெரேரா விலகியமை தொடர்பில் வெளியான காரணம்

பொதுஜன பெரமுன கட்சியின் ஊடாக ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதில் இருந்து தொழில் அதிபர் தம்மிக்க பெரேரா (Dhammika Perera ) விலகிக்கொண்டமைக்கான காரணங்கள் வெளியாகியுள்ளன.

கொழும்பின் ஊடகப்பரப்பில் இருந்து இந்தக் காரணங்கள் கசிந்துள்ளன. முன்னதாக தாம் பொதுஜன பெரமுன கட்சியின் ஊடாக ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதாக தாமே முன்வந்து தம்மிக்க பெரேரா கோரிக்கை ஒன்றை விடுத்திருந்தார்.

இது கட்சியால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதனை நாமல் ராஜபக்சவும் உறுதிப்படுத்தியிருந்தார்.

எனினும் திடீரென தம்மிக்க பெரேராவின் நெருங்கிய உறவினர் ஒருவர் சுகயீனமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த சூழ்நிலையில் அவர் போட்டியில் இருந்து தாம் விலகுவதாக கட்சிக்கு அறிவித்தார்.

இந்தநிலையில், நெருங்கிய உறவினரின் சுகயீனம் மாத்திரமல்லாமல், தமது தொழில்துறையில் பணியாற்றும் பணியாளர்களின் எதிர்காலம், தாம் ஜனாதிபதி நிலைக்கு போட்டியிடும்போது எதிர்க்கட்சிகள் செய்யப்போகும் எதிர் பிரசாரங்கள், தமது எதிர்காலத்தையும், பொதுஜன பெரமுனவின் எதிர்காலத்தையும் பாழடித்துவிடும் என்ற காரணங்களாலும் அவர் போட்டியில் இருந்து விலகிக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
21 13
செய்திகள்இலங்கை

எரிபொருள் QR குறியீட்டிற்கான போலி இணையதளங்கள் குறித்து எச்சரிக்கை

அரசாங்கத்தின் அதிகாரபூர்வ எரிபொருள் QR குறியீட்டைப் பெறுவதற்கான இணையதளத்தைப் போன்று போலியாக வடிவமைக்கப்பட்ட இணையதளங்கள் குறித்து...

20 15
செய்திகள்உலகம்

ஈரானின் முக்கிய இலக்குகள் மீது தாக்குதல்: உச்ச தலைவர் பயன்படுத்திய விமானத்தை அழித்ததாக இஸ்ரேல் அறிவிப்பு

இஸ்ரேலிய இராணுவம் நேற்று இரவு தெஹ்ரானின் மெஹ்ராபாத் விமான நிலையத்தை இலக்கு வைத்து நடத்திய தாக்குதலில்,...

19 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பாடசாலைகளை மூடுவது அல்லது இணையவழி கற்றலுக்கு மாறுவது குறித்து கல்வி அமைச்சு அறிவிப்பு

நாட்டில் தற்போது மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள QR குறியீட்டு முறைமையினால் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசைகள் நீண்டு...

18 14
செய்திகள்உலகம்

6 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சீனா – வடகொரியா விமானச் சேவை: போக்குவரத்துத் துறையில் முக்கியத் திருப்பம்!

கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக, கடந்த 2020-ம் ஆண்டு முதல் சீனா மற்றும் வடகொரியா இடையிலான...