rtjy 191 scaled
இலங்கைசெய்திகள்

டிஜிட்டல் மயமாகும் மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் திணைக்களம்

Share

டிஜிட்டல் மயமாகும் மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் திணைக்களம்

மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் திணைக்களத்தை டிஜிட்டல் மயப்படுத்தி, எதிர்காலத்தில் நவீன தொழிநுட்பத்தைப் பயன்படுத்தி சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்கும் வேலைத்திட்டம் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இவ்வருடம் மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் திணைக்களமானது இ-மோட்டாரிங் திட்டத்தின் கீழ் முழுமையாக டிஜிட்டல் மயமாக்கி மோசடி மற்றும் ஊழலை தடுப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக இன்று (21) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் தெரிவித்தார்.

இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு நீதிபதிகள் உரிய அனுமதியை வழங்குவார்கள் என நம்புவதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

அதேவேளை, 10,000க்கும் அதிகமான சாரதி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட உள்ளதாகக் குறிப்பிட்ட அமைச்சர், திணைக்களத்தை டிஜிட்டல் மயமாக்கி எதிர்காலத்தில் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
04 4
செய்திகள்இலங்கை

உணவுப் பொதிகளில் கடத்தப்பட்ட 53.6 கோடி போதைப்பொருள்: மலேசியாவிலிருந்து வந்த பார்சல்கள் சிக்கின!

மலேசியாவிலிருந்து இலங்கைக்கு உணவுப் பொதிகள் என்ற பெயரில் கடத்தப்பட்ட சுமார் 536 மில்லியன் ரூபா (53.6...

01 4
செய்திகள்உலகம்

அமெரிக்கா – ஈரான் இரகசியப் பேச்சுவார்த்தை? இஸ்ரேலியப் பிரதமர் நெதன்யாகு சந்தேகம்!

இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையிலான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்காவும் ஈரானும் தமக்குத் தெரியாமல் இரகசியப்...

02 4
செய்திகள்இலங்கை

ஈரான் உச்சத் தலைவர் கமேனியின் மறைவு: கொழும்பு தூதரகத்தில் ரணில் விக்ரமசிங்க அஞ்சலி!

ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் (Ayatollah Ali Khamenei) திடீர் மறைவுக்கு ஆழ்ந்த...

03 5
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அனுராதபுரம் – வவுனியா மின்சார விநியோகத்தில் கோளாறு: நாட்டின் பல இடங்களில் மின்தடை!

புதிய அனுராதபுரம் மற்றும் வவுனியா ஆகிய பகுதிகளுக்கு இடையிலான மின் விநியோக கட்டமைப்பில் ஏற்பட்ட திடீர்...