rtjy 191 scaled
இலங்கைசெய்திகள்

டிஜிட்டல் மயமாகும் மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் திணைக்களம்

Share

டிஜிட்டல் மயமாகும் மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் திணைக்களம்

மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் திணைக்களத்தை டிஜிட்டல் மயப்படுத்தி, எதிர்காலத்தில் நவீன தொழிநுட்பத்தைப் பயன்படுத்தி சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்கும் வேலைத்திட்டம் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இவ்வருடம் மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் திணைக்களமானது இ-மோட்டாரிங் திட்டத்தின் கீழ் முழுமையாக டிஜிட்டல் மயமாக்கி மோசடி மற்றும் ஊழலை தடுப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக இன்று (21) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் தெரிவித்தார்.

இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு நீதிபதிகள் உரிய அனுமதியை வழங்குவார்கள் என நம்புவதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

அதேவேளை, 10,000க்கும் அதிகமான சாரதி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட உள்ளதாகக் குறிப்பிட்ட அமைச்சர், திணைக்களத்தை டிஜிட்டல் மயமாக்கி எதிர்காலத்தில் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
4670422 455699102
செய்திகள்உலகம்

கிறிஸ்துமஸ் தின போர் நிறுத்தத்தை ரஷ்யா நிராகரித்தது வேதனையளிக்கிறது – பாப்பரசர் 14-வது லியோ கவலை!

உலகம் முழுவதும் நாளை (25) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், பாப்பரசர் 14-வது லியோ விடுத்த...

images 10 3
செய்திகள்உலகம்

தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவு!

தாய்வானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம்...

images 9 3
அரசியல்இலங்கைசெய்திகள்

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கி வெடித்ததில் கான்ஸ்டபிள் காயம்!

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் இன்று (24) மாலை நிகழ்ந்த எதிர்பாராத துப்பாக்கிச் சூட்டு விபத்தில் பொலிஸ்...

images 9 3
செய்திகள்இலங்கை

நீர்நிலைகளில் இறங்கும்போது எச்சரிக்கை: பண்டிகைக் காலத்தில் பொதுமக்களுக்கு வைத்திய நிபுணர் விடுத்த அவசர வேண்டுகோள்!

தற்போது நிலவும் அனர்த்தச் சூழல் மற்றும் பண்டிகைக் காலத்தைக் கருத்திற் கொண்டு, நீர்நிலைகளைப் பயன்படுத்தும் போது...