rtjy 257 scaled
இலங்கைசெய்திகள்

புதிய கடவுச்சீட்டு விண்ணப்ப முறை தொடர்பில் அறிவித்தல்

Share

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் புதிய இணைய விண்ணப்ப முறையின் மூலம் 35,000 இணையம் மூலமான கடவுச்சீட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்ட போதிலும், 3700 கடவுச்சீட்டுகள் மட்டுமே விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக குடிவரவு – குடியகழ்வு கட்டுப்பாட்டாளர் ஹர்ச இலுக்பிட்டிய தெரிவித்தார்.

கடந்த ஜூலை 20 வரை பெறப்பட்ட 35,145 இணையம் மூலமான விண்ணப்பங்களில் 28,959 விண்ணப்பங்கள் சாதாரண சேவைக்காகவும், 14 நாட்களுக்குள் அனுப்பப்படும் கடவுச்சீட்டுக்களுக்காக 6,186 விண்ணப்பங்களும் கிடைத்துள்ளன.

எனினும் 35,145 இணைய மூலமான விண்ணப்பங்களில், 16,869 விண்ணப்பதாரர்கள் மட்டுமே நியமிக்கப்பட்ட பிரதேச செயலக அலுவலகத்தில் தங்கள் கைரேகைகளை வைத்துள்ளனர்.

இந்தநிலையில் 3,712 கடவுச்சீட்டுகள் மட்டுமே விநியோகிக்கப்பட்டுள்ளன 60 வயதுக்கு மேற்பட்டவர்களிடமிருந்து பெறப்பட்ட சில விண்ணப்பங்களில், கைரேகையை வைக்கத் தேவையில்லை என்றாலும், கடவுசீட்டுக்களில் கையொப்பம் இடப்பட வேண்டிய கட்டாயப் படிவமான கையொப்பமிடப்பட்ட ஆவணத்தை பலர் பதிவேற்றவில்லை.

எனவே தெளிவான கையொப்பத்துடன் ஆவணத்தை மீண்டும் பதிவேற்ற விண்ணப்பதாரர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளதாக கட்டுப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Screenshot 2025 12 22 110737 1170x800 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தலைக்கவசம் இன்றி அதிவேகப் பயணம்: மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து – வாலிபர் பலி, சிறுவன் உட்பட நால்வர் காயம்!

யாழ்ப்பாணம், புத்தூர் பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் இரண்டு ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர்...

IMG 2581 1170x658 1
செய்திகள்அரசியல்இலங்கை

தையிட்டி எங்கள் சொத்து; விகாரையை அகற்று – யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கண்டனப் போராட்டம்!

யாழ்ப்பாணம், தையிட்டிப் பகுதியில் அமையப்பெற்றுள்ள விகாரையை அகற்றக் கோரியும், அங்கு இடம்பெறும் நில ஆக்கிரமிப்புகளுக்கு எதிராகவும்...

images 2 7
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையின் ஏற்றுமதித் துறையில் பாரிய வளர்ச்சி: 11 மாதங்களில் 15,776 மில்லியன் டொலர் வருமானம்!

இலங்கையின் ஏற்றுமதித் துறை 2025 ஆம் ஆண்டின் முதல் 11 மாதங்களில் (ஜனவரி – நவம்பர்)...

603890102 1355544646614961 2421916803890790440 n
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அம்பாறை கடற்கரையில் இரு பெரிய கடல் ஆமைகள் உயிரிழந்த நிலையில் கரையொதுக்கம்!

அம்பாறை மாவட்டத்தின் மருதமுனை மற்றும் கல்முனை இடைப்பட்ட கடற்கரைப் பகுதிகளில் இன்று (22) மதியம் இரண்டு...