Untitled 1
இலங்கைசெய்திகள்

அனர்த்தத்தின் பின்னர் டெங்கு அபாயம் அதிகரிப்பு: கடந்த வாரம் 616 டெங்கு நோயாளர்கள் அடையாளம்!

Share

நாட்டில் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களின் பின்னர் டெங்கு நோய் பரவும் வாய்ப்பு அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் பணிப்பாளர், விசேட வைத்தியர் கபில கன்னன்கர எச்சரித்துள்ளார்.

கொழும்பு 07 இல் உள்ள இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற ஊடகச் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் கடந்த வாரத்தில் மாத்திரம் 616 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதன்படி, கொழும்பு மாவட்டத்தில் 263 டெங்கு நோயாளர்களும், கம்பஹா மாவட்டத்தில் 146 டெங்கு நோயாளர்களும், களுத்துறை மாவட்டத்தில் 57 டெங்கு நோயாளர்களும், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 36 டெங்கு நோயாளர்களும், குருணாகல் மாவட்டத்தில் 26 டெங்கு நோயாளர்களும், இரத்தினபுரி மாவட்டத்தில் 68 டெங்கு நோயாளர்களும், கேகாலை மாவட்டத்தில் 20 டெங்கு நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சீரற்ற வானிலையின் பின்னர் நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மழை காலத்தில் தான் பெரும்பாலும் டெங்கு நோய் பரவுகிறது.

மக்கள் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள இந்த நேரத்தில் டெங்கு நோய் பரவும் வாய்ப்பு அதிகரித்துள்ளமை பாரதூரமான விடயமாகும்.

எனவே டெங்கு அபாயமிக்க பகுதிகளில் டெங்கு நோய்க்கான விழிப்புணர்வு வேலைத்திட்டங்கள் செயற்படுத்தப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
500x300 23304852 4 fog
செய்திகள்விளையாட்டு

இந்தியா – தென்னாப்பிரிக்கா 4-வது டி20 போட்டி ரத்து: லக்னோவில் கடும் பனியால் பாதிப்பு!

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில்...

MediaFile 5 3
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கொத்மலை – இறம்பொடை மண்சரிவு: பெண்ணொருவருடையது என சந்தேகிக்கப்படும் உடல் பாகம் மீட்பு!

கொத்மலை – இறம்பொடை பகுதியில் ஏற்பட்ட பாரிய மண்சரிவில் சிக்கிக் காணாமல் போனவர்களில் ஒரு பெண்ணுடையது...

23 658fd712815b0
இலங்கைசெய்திகள்

பேருந்து – முச்சக்கர வண்டி மோதிய விபத்தில் தாய் மற்றும் இரண்டு வயது குழந்தை பலி!

தெஹியத்தகண்டிய, முவகம்மன பகுதியில் இன்று (17) பிற்பகல் இடம்பெற்ற கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த...

MediaFile 796x445 1
இலங்கைசெய்திகள்

பாதுகாப்பு அச்சுறுத்தல்: அநுராதபுரம் போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் திடீர் பணிப்புறக்கணிப்பு!

வைத்தியசாலை வளாகத்தில் தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தை அடுத்து, தமக்கு உரிய பாதுகாப்பு இல்லை எனக் கூறி...