tamilni 15 scaled
இலங்கைசெய்திகள்

கொழும்பில் தீவிரமாக பரவும் டெங்கு

Share

கொழும்பில் தீவிரமாக பரவும் டெங்கு

கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட 72 அரச நிறுவனங்கள் மற்றும் 53 பாடசாலைகளில் டெங்கு நுளம்பு பெருக்கம் இனங்காணப்பட்டுள்ளன.

கொழும்பு மாநகரசபையின் சுகாதார திணைக்களத்தினால் 121 அரச நிறுவனங்கள் மற்றும் 65 பாடசாலைகளில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போது டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்கள் இனங்காணப்பட்டுள்ளன.

மழையுடனான காலநிலை காரணமாக டிசம்பர் மாதம் டெங்கு பரவும் அபாயம் காணப்படுவதாக கொழும்பு மாநகர சபையின் பிரதம வைத்திய அதிகாரி ருவன் விஜயமுனி தெரிவித்துள்ளார்.

நாட்டிலுள்ள மொத்த டெங்கு நோயாளர்களில் 47 வீதமானவர்கள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதாகவும், கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் இருந்து நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் கொழும்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கொதட்டுவ, மஹரகம போன்ற பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரியின் எல்லைக்குட்பட்ட பிரதேசங்களிலேயே அதிக டெங்கு நோயாளர்கள் பதிவாகி வருவதாக தெரியவந்துள்ளது.

Share
தொடர்புடையது
Untitled 68
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காலி – தெலிக்கடையில் பயங்கரம்: ஆணும் பெண்ணும் வெட்டிக் கொலை – ஓய்வுபெற்ற இராணுவ வீரர் கைது!

காலி, தெலிக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இன்று (ஏப்ரல் 03, 2026) அதிகாலை இடம்பெற்றதாகக் கூறப்படும்...

Untitled 67
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைச் சுற்றுலாவில் 19.7% சரிவு: மார்ச் மாதத்தில் வருகை தந்த பயணிகளின் எண்ணிக்கை வெளியீடு!

இலங்கைச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA) வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, 2026 மார்ச் மாதத்தில்...

Untitled 66
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சம்பா அரிசி தட்டுப்பாட்டுக்குத் தீர்வு: பொன்னி மற்றும் கீரி பொன்னி இறக்குமதிக்கு அரசாங்கம் அனுமதி!

இலங்கையில் நிலவும் சம்பா மற்றும் கீரி சம்பா அரிசி தட்டுப்பாட்டைப் போக்கி, சந்தையை நிலைப்படுத்துவதற்காக விசேட...

Untitled 65
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிலாபத்தில் பாரிய இணையவழி நிதி மோசடி: 147 வெளிநாட்டுப் பிரஜைகள் அதிரடி கைது!

இலங்கையின் சிலாபம், இரணாவில பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்து, சர்வதேச ரீதியிலான ஒழுங்கமைக்கப்பட்ட...