24 665d451977ec7
இலங்கைசெய்திகள்

இலங்கையில் அதிகரிக்கும் டெங்கு நோய் தொற்று: அபாய வலயங்கள்

Share

இலங்கையில் அதிகரிக்கும் டெங்கு நோய் தொற்று: அபாய வலயங்கள்

கொழும்பு (Colombo) உட்பட 15 மாவட்டங்களில் உள்ள 71 பிரிவுகள் டெங்கு காய்ச்சலுக்கான அதிக ஆபத்துள்ள வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக இலங்கையின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு அறிவித்துள்ளது.

2024ஆம் ஆண்டு மே 26 மற்றும் ஜூன் 1 இடைப்பட்ட காலப்பகுதிக்குள் நுளம்புகள் பெருகும் இடங்கள் அதிகரித்துள்ளதனை அவதானித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளை, கடந்த ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் வரை பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் குறைவாக காணப்பட்டுள்ளது.

எனினும், கடந்த ஆண்டுகளில் பெறப்பட்ட எண்ணிக்கையின்படி தென்மேற்கு பருவமழை தொடங்கும் மே மாதத்திலிருந்து நோயின் அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், டெங்கு நோயால் 2024ஆம் ஆண்டில் இதுவரை ஒன்பது இறப்புக்களுடன் கிட்டத்தட்ட 25,000 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...