இலங்கைசெய்திகள்

அரசாங்கத்திடம் மகிந்த கோரிக்கை

24 66417b7bc9676
Share

அரசாங்கத்திடம் மகிந்த கோரிக்கை

அரச சொத்துக்களை தனியார் மயமாக்கும் அரசாங்கத்தின் தீர்மானத்தை பிற்போடுமாறு முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தலைவருமான மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) கோரிக்கை விடுத்துள்ளார்.

அரசாங்கத்தின் மீதான பரவலான அதிருப்தியை தணிக்கும் நடவடிக்கையாக அரசுக்குச் சொந்தமான சொத்துக்கள் அல்லது நிறுவனங்களை விற்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் ஒத்திவைக்க தாம் முன்மொழிவதாக ராஜபக்ச கூறியுள்ளார்.

நாட்டில் தேர்தல் ஒன்றின் பின்னர் தெரிவு செய்யப்படும் புதிய அரசாங்கம், அரசுக்கு சொந்தமான சொத்துக்கள் மற்றும் நிறுவனங்களை தேர்தலில் அவர்கள் பெறும் ஆணையின்படி கையாள முடியும்.

எனினும், சில தேசிய சொத்துக்கள் மற்றும் அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை விற்கும் அரசாங்கத்தின் திட்டங்கள் தொழிற்சங்கங்கள், அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன.

எனவே, அரசுக்கு சொந்தமான நிறுவனங்களின் எந்தவொரு மறுசீரமைப்பும் அதிகபட்ச வெளிப்படைத்தன்மையுடன் தேசிய பாதுகாப்புக்கு இசைவான முறையில் கலந்தாலோசித்து நடைபெற வேண்டும்.

இந்நிலையில், சில அரசியல் கட்சிகள் பிடிவாதமான அணுகுமுறையை தனியார் மயமாக்கும் திட்டத்தில் கொண்டிருப்பதாக ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.

மேலும், ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக தாம் நாட்டை ஆட்சி செய்த போது பொருளாதாரம் வளர்ச்சியடைந்தது என்றும் தனியார்மயம் குறித்த விவாதம் கூட நடைபெறவில்லை என்றும் மகிந்த ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளார்.

Share
Related Articles
8 10
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றத்தில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக நாடாளுமன்ற...

10 10
இலங்கைசெய்திகள்

ரணிலின் வெளிநாட்டு பயணங்களால் ஏற்பட்ட செலவு : அமைச்சர் வெளியிட்ட தகவல்

ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 1.27 பில்லியன் ரூபா...

6 11
உலகம்செய்திகள்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்கியதில் 13 இந்தியர்கள் பலி

காஷ்மீர்(Kasmir) மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 13 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்....

9 10
இலங்கைசெய்திகள்

விமான சேவையை நிறுத்தும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

இந்தியா – பாகிஸ்தான் போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக...