23 1
இலங்கைசெய்திகள்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நிச்சயம் நீக்குவோம்..! அநுர உறுதி

Share

பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிராக எல்லா வழிகளிலும் போராடியவர்கள் நாங்கள். எனவே, அந்தச் சட்டத்தை நிச்சயம் நீக்குவோம். ஐரோப்பிய ஒன்றியக் குழுவிடமும் இது தொடர்பில் எடுத்துரைக்கப்பட்டது என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சியொன்றில் ஒளிபரப்பான அரசியல் விவாத நிகழ்வில் பங்கேற்று கருத்து வெளியிட்ட ஜனாதிபதி, இது தொடர்பில் மேலும் கூறியதாவது, “எமது நீண்ட கால எதிர்பார்ப்புகளும், ஐரோப்பிய ஒன்றியம் முன்வைக்கும் கருத்துக்களும் சமாந்தரமுடையவையாக உள்ளன என்று நான், ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழுவிடம் சுட்டிக்காட்டினேன்.

1979 இல் பயங்கரவாதத் தடைச் சட்டம் கொண்டு வந்தபோது அதற்கு எதிராகக் கறுப்புக்கொடி பறக்கவிட்டு, சிறைக்குச் சென்றவர்கள் எமது உறுப்பினர்கள்.

அதேபோல் 1988 மற்றும் 1989 காலப்பகுதியில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தால் நாமே கடுமையாகப் பாதிக்கப்பட்டோம்.

பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும் என்பதற்காகப் போராட்டங்களை நடத்தினோம்.

எனவே, பயங்கரவாதத் தடைச் சட்டம் நிச்சயம் நீக்கப்படும் எனக் கூறினேன்.

சட்டமொன்றை இரத்துச் செய்யும்போது, சட்டத்தில் வெற்றிடம் இருக்கக்கூடாது. அவ்வாறான வெற்றிடத்துக்கு இடமளிக்காது, சட்டத்தை ஈடுசெய்யக் கூடிய வகையில் புதிய சட்டம் அவசியம்.

ஆகவே, பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கவும், புதிய சட்டத்தைக் கொண்டுவரவும் குழுவொன்றை நியமித்துள்ளோம்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
images 6 2
செய்திகள்உலகம்

பிரித்தானியாவில் புதிய சகாப்தம்: கடவுச்சீட்டு சோதனை இல்லை, நீண்ட வரிசை இல்லை! – AI மூலம் விமான நிலையங்களில் முக ஸ்கேன் அனுமதி!

பிரித்தானியா, தனது விமான நிலையம் ஒன்றில், நவீன தொழில்நுட்பம் மூலம் கடவுச்சீட்டு சோதனை இல்லாமலே பயணிகளை...

skynews donald trump benjamin netanyahu 7080062
செய்திகள்உலகம்

ஊழல் வழக்கில் நெதன்யாகுவை மன்னிக்க வேண்டும்: ட்ரம்ப் கடிதத்துக்கு இஸ்ரேல் ஜனாதிபதி அலுவலகம் மறுப்பு!

ஊழல் வழக்குகளில் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை (Benjamin Netanyahu) மன்னிக்குமாறு அந்நாட்டு ஜனாதிபதி ஐசக்...

articles2FgwJ5r85aOgQuM4EhGVg6
அரசியல்இலங்கைசெய்திகள்

நுகேகொடைப் பேரணி மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நினைவூட்டவே: எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து அழுத்தம் கொடுப்போம் – நாமல் ராஜபக்ச!

எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி நுகேகொடையில் நடைபெறவிருக்கும் அரசாங்கத்திற்கு எதிரான பொதுப் பேரணி, அரசாங்கம் மக்களுக்கு...

25 6915d20fc755f
செய்திகள்அரசியல்இலங்கை

வென்றெடுக்கப்பட்ட அதிகாரம் பொதுமக்களுக்காக மட்டுமே; சட்டத்தின் முன் அனைவரும் சமமே”: கார்த்திகை வீரர்கள் தினத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க!

வென்றெடுக்கப்பட்ட அதிகாரம் பொதுமக்களுக்காக மாத்திரமே என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று நடைபெற்ற கார்த்திகை வீரர்கள்...