tamilni 93 scaled
இலங்கைசெய்திகள்

அரசியல் பிளவுகளால் சிதறும் தமிழ் புலம்பெயர் குழுக்கள்!

Share

இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவடைந்து ஏறக்குறைய 15 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள இந்த காலகட்டத்தில் பெரும்பான்மையான சிங்களவர்களுக்கும் தமிழ் சிறுபான்மையினருக்கும் இடையில் அரசியல் பிளவுகள் தோன்றியுள்ளதாக தெ டிப்ளொமெட் என்ற ஆசிய பசுபிக் அரசியல் நிலவரங்களை ஆராயும் சஞ்சிகை தெரிவித்துள்ளது.

அத்துடன் நீண்ட காலமாக இலங்கை அரசாங்கம் செய்த போர்க்குற்றங்களுக்காக நீதி மற்றும் பொறுப்புக்கூறலைக் கோரி வரும் தமிழ் புலம்பெயர் குழுக்களிடையேயும் அரசியல் பிளவுகள் ஆழமாகியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதியுதவி செய்ததாக கூறி இலங்கை அரசாங்கத்தால் தடுப்புப்பட்டியலில் வைக்கப்பட்டிருந்த, ஒரு காலத்தில் அதிகாரம் பெற்ற தமிழ் குடை அமைப்பான உலக தமிழர் பேரவை, பௌத்த தூதுக்குழுவுடன் இணைந்து வெளியிட்ட இமாலய பிரகடனம் இந்த பிளவை அதிகரித்துள்ளதாக டிப்ளொமெட் சுட்டிக்காட்டியுள்ளது.

இது தமிழ் மக்கள் மத்தியிலும் பதற்றதை தோற்றுவித்துள்ளது. இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் இந்த பிரகடனம் முன்வைக்கப்பட்டது.

இந்த நிலையில் ஆவணத்தில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள பல நடவடிக்கைகளை பரிசீலிப்பதாக அவரும் உறுதியளித்துள்ளார். பிரகடனம் எளிமையானது மற்றும் ஆறு கருப்பொருட்களை பகுதிகளை உள்ளடக்கியது.

இருப்பினும், பிரச்சினைகளின் மிகவும் சர்ச்சைக்குரிய முக்கிய பகுதிகள் அதில் சேர்க்கப்படாமை, குறித்த பிரகடனம், தமிழ் மக்களையும் சர்வதேச சமூகத்தையும் ஏமாற்ற உந்துதல் பெற்ற அரசியல் சூழ்ச்சி என்று பலரும் விமர்சனம் வெளியிட்டுள்ளதாக டிப்ளொமெட் குறிப்பிட்டுள்ளது.

Share
தொடர்புடையது
IMG 9924 1024x683 1
செய்திகள்உலகம்

சூடானில் மார்ச் மாதத்துடன் உணவு இருப்பு தீரும் அபாயம்: 700 மில்லியன் டொலர் அவசர நிதியைக் கோருகிறது ஐ.நா!

உள்நாட்டுப் போரினால் பேரழிவைச் சந்தித்துள்ள சூடானில், உடனடியாகக் கூடுதல் நிதி உதவி வழங்கப்படாவிட்டால் மிக மோசமான...

10aa5a71cfd76011153a66552523da5f7560cde2db35ee6d414158cd57f94959
உலகம்செய்திகள்

டோக்கியோவில் மின்தடையால் ரயில் சேவைகள் முடக்கம்: 6.7 லட்சம் பயணிகள் பாதிப்பு!

ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் இன்று (16) ஏற்பட்ட திடீர் மின்தடை மற்றும் தீ விபத்து காரணமாக...

1735040735 c
செய்திகள்இலங்கை

கிராம அலுவலர் மீது தாக்குதல்: நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரனை ஜனவரி 20-ல் ஆஜர்ப்படுத்த நீதிமன்றம் உத்தரவு!

கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் இன்று (16) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வழக்கின் அடிப்படையில், நாடாளுமன்ற உறுப்பினர் க....

Keheliya Rambukwella
செய்திகள்இலங்கை

கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் குடும்பத்தினருக்கு எதிராக மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை: நீதவான் நீதிமன்ற வழக்கு முடிவு!

முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, அவரது புதல்வர் ரமித் ரம்புக்வெல்ல மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராகப்...