tamilni 93 scaled
இலங்கைசெய்திகள்

அரசியல் பிளவுகளால் சிதறும் தமிழ் புலம்பெயர் குழுக்கள்!

Share

இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவடைந்து ஏறக்குறைய 15 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள இந்த காலகட்டத்தில் பெரும்பான்மையான சிங்களவர்களுக்கும் தமிழ் சிறுபான்மையினருக்கும் இடையில் அரசியல் பிளவுகள் தோன்றியுள்ளதாக தெ டிப்ளொமெட் என்ற ஆசிய பசுபிக் அரசியல் நிலவரங்களை ஆராயும் சஞ்சிகை தெரிவித்துள்ளது.

அத்துடன் நீண்ட காலமாக இலங்கை அரசாங்கம் செய்த போர்க்குற்றங்களுக்காக நீதி மற்றும் பொறுப்புக்கூறலைக் கோரி வரும் தமிழ் புலம்பெயர் குழுக்களிடையேயும் அரசியல் பிளவுகள் ஆழமாகியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதியுதவி செய்ததாக கூறி இலங்கை அரசாங்கத்தால் தடுப்புப்பட்டியலில் வைக்கப்பட்டிருந்த, ஒரு காலத்தில் அதிகாரம் பெற்ற தமிழ் குடை அமைப்பான உலக தமிழர் பேரவை, பௌத்த தூதுக்குழுவுடன் இணைந்து வெளியிட்ட இமாலய பிரகடனம் இந்த பிளவை அதிகரித்துள்ளதாக டிப்ளொமெட் சுட்டிக்காட்டியுள்ளது.

இது தமிழ் மக்கள் மத்தியிலும் பதற்றதை தோற்றுவித்துள்ளது. இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் இந்த பிரகடனம் முன்வைக்கப்பட்டது.

இந்த நிலையில் ஆவணத்தில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள பல நடவடிக்கைகளை பரிசீலிப்பதாக அவரும் உறுதியளித்துள்ளார். பிரகடனம் எளிமையானது மற்றும் ஆறு கருப்பொருட்களை பகுதிகளை உள்ளடக்கியது.

இருப்பினும், பிரச்சினைகளின் மிகவும் சர்ச்சைக்குரிய முக்கிய பகுதிகள் அதில் சேர்க்கப்படாமை, குறித்த பிரகடனம், தமிழ் மக்களையும் சர்வதேச சமூகத்தையும் ஏமாற்ற உந்துதல் பெற்ற அரசியல் சூழ்ச்சி என்று பலரும் விமர்சனம் வெளியிட்டுள்ளதாக டிப்ளொமெட் குறிப்பிட்டுள்ளது.

Share
தொடர்புடையது
Untitled 37
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிஐடி தடுப்புக்காவலில் இருந்த கைதிக்கு பிறந்தநாள் கொண்டாட்டம்: நிலையப் பொறுப்பதிகாரிக்கு எதிராக கடும் நடவடிக்கை!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) தடுத்து வைக்கப்பட்டுள்ள ‘கணேமுல்ல சஞ்சீவ’ படுகொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேக...

Untitled 35
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பு கிணற்றுப் படுகொலைச் சம்பவங்கள்: பிரதான சூத்திரதாரி கொழும்பில் கைது!

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை நெல்லிக்காட்டு வயல் பகுதியில் இடம்பெற்ற அதிர்ச்சியை ஏற்படுத்திய கிணற்றுப் படுகொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய...

Untitled 34
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வறட்சி அதிகரிப்பு: இலங்கையில் நீர் விநியோகத்தை மட்டுப்படுத்த வேண்டிய நிலை என எச்சரிக்கை!

இலங்கையில் தற்போது நிலவும் கடும் வறட்சியான காலநிலை காரணமாக, அடுத்த இரண்டு முதல் மூன்று வாரங்களுக்கு...

Untitled 32
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நிதி மோசடியில் ஈடுபட்ட 125 சீனப் பிரஜைகள் இலங்கையிலிருந்து நாடு கடத்தப்பட்டனர்!

இலங்கையில் தங்கியிருந்து இணையவழி நிதி மோசடிகளில் (Online Scams) ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த 125...