tamilni 530 scaled
இலங்கைசெய்திகள்

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

Share

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

பெப்ரவரி மாதத்தில் பதிவாகும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் குறைந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

எனினும், இந்த வருடத்தில் 05 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் அந்த பிரிவு குறிப்பிடுகின்றது.

இதேவேளை, ஜனவரி மாதம் வரை 60க்கும் மேற்பட்ட டெங்கு அபாய வலயங்கள் காணப்பட்ட நிலையில், 24 ஆக குறைந்துள்ளது.

இதற்கமைய, பெப்ரவரி மாதத்தில் 5,181 டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும், ஜனவரி மாதத்தில் இலங்கையில் 10,417 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இது கடந்த வருடம் ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் அதிக எண்ணிக்கையாகும். அதன்படி, இந்த வருடத்தில் நாட்டில் 15,598 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பெப்ரவரி மாதத்தில், கொழும்பு மாவட்டத்திலிருந்து அதிகளவான நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதுடன், அந்த எண்ணிக்கை 3,359 ஆகும்.

மேலும், யாழ்ப்பாண மாவட்டத்தில் 3,245 டெங்கு நோயாளர்களும், கம்பஹா மாவட்டத்தில் 1,324 நோயாளர்களும், கண்டி மாவட்டத்தில் 1,052 நோயாளர்களும் கண்டறியப்பட்டுள்ளனர்.

Share
தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...