4 5
இலங்கைசெய்திகள்

இரத்து செய்யப்படும் விடுமுறை கொடுப்பனவு: ஜனாதிபதியை நாடும் முக்கிய தரப்பு

Share

இரத்து செய்யப்படும் விடுமுறை கொடுப்பனவு: ஜனாதிபதியை நாடும் முக்கிய தரப்பு

விடுமுறை கொடுப்பனவை இரத்து செய்யும் முடிவை மாற்றுமாறு ஜனாதிபதியை சந்தித்து கோரிக்கை விடுக்க நாடாளுமன்ற ஊழியர்கள் தயாராகி வருகின்றதாக கூறப்படுகிறது.

ஜனாதிபதி அடுத்தவாரம் நாடாளுமன்றத்திற்கு விஜயம் செய்யவுள்ளமையினால் அப்போது இந்த கோரிக்கையை முன்வைக்க எதிர்பார்த்துள்ளதாக ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

பொருளாதார நெருக்கடிகளை கருத்தில் கொண்டு நாடாளுமன்ற ஊழியர்களின் விடுமுறை கொடுப்பனவை இரத்து செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அத்துடன் நாடாளுமன்ற ஊழியர்களுக்கு மாத்திரம் இந்த கொடுப்பனவு வழங்கப்படுமாயின் அரச சேவையில் பிரச்சினைக்குரிய நிலைமை ஏற்படும் என பொருளாதார நிபுணர்கள் அரசாங்கத்திற்கு சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த விடுமுறை கொடுப்பனவு நீண்ட காலமாக நாடாளுமன்ற ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில், விடுப்பு கொடுப்பனவு ரத்து செய்யப்பட்டதால், நாடாளுமன்ற ஊழியர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
20 13
இலங்கைசெய்திகள்

இலங்கையில் மற்றுமொரு விபத்து – சிறுவர்கள், பெண்கள் உட்பட 37 பேர் காயம்

கண்டியில் நேற்று இரவு இடம்பெற்ற பேருந்து விபத்தில் 37 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பேருந்து...

19 12
இலங்கைசெய்திகள்

இலங்கை முழுவதும் உப்பு தட்டுப்பாடு – ஒரு கிலோ கிராம் 500 ரூபாய்..!

நாட்டில் உப்பு இறக்குமதியில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது....

18 12
உலகம்செய்திகள்

இலங்கை தமிழர்களுக்கு நடந்த கொடூரம்.. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடத்தில் குண்டு வீச முயற்சி

தமிழ்நாடு சென்னையின் மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள, முன்னாள் முதல்வர்களான அண்ணாத்துரை மற்றும் கருணாநிதி ஆகியோரின் நினைவிடங்களை...

16 14
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபைக்கு உறுப்பினர்களை நியமிப்பதில் ஐ.தே.க.வுக்கு சிக்கல்

கொழும்பு மாநகர சபைக்கு உறுப்பினர்களை நியமிப்பதில் ஐக்கிய தேசியக் கட்சி பெரும் சிக்கலை எதிர்கொண்டுள்ளதாக அரசியல்...