tamilni 105 scaled
இலங்கைசெய்திகள்

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் குறித்து பிரதி சபாநாயகர் அறிவிப்பு

Share

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் குறித்து பிரதி சபாநாயகர் அறிவிப்பு

நாடாளுமன்றத்தின் ஒழுங்கு பத்திரத்தில் உள்ளடக்கப்படாத உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை அரசமைப்புக்கு முரணானதா அல்லது முரணற்றதா என்று ஆராயும் அதிகாரம் இல்லாத காரணத்தால் சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட 10 மனுக்களின் விசாரணைகளை நிறைவுபடுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

நாடாளுமன்றம் நேற்று காலை 9.30 மணிக்கு பிரதி சபாநாயகர் தலைமையில் கூடிய நிலையில் இடம்பெற்ற சபாநாயகர் அறிவிப்பின் போதே இந்த விடயத்தை அஜித் ராஜபக்ச சபைக்கு அறிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், “வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் 2023.10.03 ஆம் திகதி நாடாளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் உள்வாங்கப்படவில்லை.

அரசமைப்பின் 121 (3) அத்தியாயத்தின் பிரகாரம் இந்தச் சட்டமூலம் உயர்நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்பட்டது.

இவ்வாறான நிலையில் நாடாளுமன்றத்தின் ஒழுங்குப் பத்திரத்தில் உள்ளடக்கப்படாத ஒரு சட்டமூலத்தை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும் அதிகாரம் இல்லை.

இதன் காரணமாக தாக்கல் செய்யப்பட்ட 10 வழக்குகளின் விசாரணைகளை நிறைவுபடுத்தத் தீர்மானித்துள்ளதாக உயர் நீதிமன்றம் நாடாளுமன்றத்துக்கு அறிவித்துள்ளது.” என்றார்.

Share
தொடர்புடையது
20 12
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பணக்கார அரசியல் கட்சி எது தெரியுமா…!

இலங்கையில்(sri lanka) உள்ள பணக்கார அரசியல் கட்சி தேசிய மக்கள் சக்தி எனவும் அவர்களிடம் தேவைக்கும்...

19 11
உலகம்செய்திகள்

இந்தியாவுடனான போர் : பாகிஸ்தானுக்கு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி : அந்நாட்டு பிரதமர் பெருமிதம்

பாகிஸ்தான்(pakistan) பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் இந்தியாவுடனான (india)போரில் பாகிஸ்தான் தான் வெற்றி பெற்றதாக கூறியுள்ளார். இது...

18 11
உலகம்செய்திகள்

முடிவிற்கு வருமா உக்ரைன்- ரஷ்ய போர் : புடின் விடுத்துள்ள அழைப்பு..!

போர் நிறுத்தம் தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தைக்கு வரும்படி உக்ரைனுக்கு(ukraine) ரஷ்ய ஜனாதிபதி புடின் (viladdmir putin)அழைப்பு...

17 11
உலகம்செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர் : பலியான நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையானது எல்லையில் ஊடுருவிய தீவிரவாதிகளை தண்டிக்க நன்கு திட்டமிடப்பட்டு செயல்படுத்தட்ட இராணுவ நடவடிக்கை...