21 6
இலங்கைசெய்திகள்

இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் எடுத்துள்ள தீர்மானம்

Share

இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் எடுத்துள்ள தீர்மானம்

இலங்கை தேர்தல் ஆணையகத்தின் அழைப்பைத் தொடர்ந்து, செப்டம்பர் 21ஆம் திகதி திட்டமிடப்பட்டுள்ள ஜனாதிபதித் தேர்தலைக் கண்காணிப்பதற்காக இலங்கைக்கு தேர்தல் கண்காணிப்புப் பணிக்குழுவை அனுப்ப ஐரோப்பிய ஒன்றியம் முடிவு செய்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம், தேர்தல் செயல்முறைகளுடன் நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது.

இலங்கை விடயத்தில், ஐரோப்பிய ஒன்றியத்தின் அர்ப்பணிப்பு மற்றும் பங்காளித்துவத்தை பிரதிபலிக்கும் வகையில், ஆறு சந்தர்ப்பங்களில் ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு தேர்தல் கண்காணிப்பாளர்களை அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், வெளியுறவு மற்றும் பாதுகாப்புக் கொள்கைக்கான யூனியனின் உயர் பிரதிநிதியும், ஐரோப்பிய ஆணையத்தின் துணைத் தலைவருமான ஜோசப் பொரெல் ( Josep Borrell), ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் நாச்சோ சான்செஸ் அமோர் ( Nacho Sánchez Amor) என்பவரை இலங்கை தேர்தலுக்கான தலைமைப் பார்வையாளராக நியமித்துள்ளார்.

அவர் தலைமையிலான குழு விரைவில் இலங்கைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

Share
தொடர்புடையது
12
இலங்கைசெய்திகள்

டக்ளஸின் ஆதரவை நாடும் தமிழ்கட்சிகள்! இன்று இடம்பெறவுள்ள முக்கிய சந்திப்பு

ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியும் (சங்குச் சின்னக் கட்சியும்), அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் (சைக்கிள்...

11
இலங்கைசெய்திகள்

முல்லைத்தீவில் வீடு உடைத்து தங்க நகைகள் திருட்டு!

முல்லைத்தீவு- முள்ளியவளை, மாமூலை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தங்க நகைகள் திருடப்பட்டுள்ளது. குறித்த சம்பவமானது...

3 4
இலங்கைசெய்திகள்

கணேமுல்லே சஞ்சீவ படுகொலை! அடையாள அணிவகுப்பில் வெளியான முக்கிய தகவல்

பாதாள உலகக் கும்பல் உறுப்பினர் கணேமுல்லே சஞ்சீவவை சுட்டுக் கொன்ற சந்தேக நபர் தொடர்பில் இன்று...

4 3
இலங்கைசெய்திகள்

செம்மணி மனித புதைகுழி தொடர்பில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்க தலைவி முன்வைத்துள்ள கோரிக்கை

செம்மணி மனித புதைகுழி அகழ்வுகள் சர்வதேச கண்காணிப்புடன் மேற்கொள்ளப்பட வேண்டும் என வடக்கிழக்கு வலிந்து காணாமல்...