12 9
இலங்கைசெய்திகள்

டிசம்பரில் வெளிவரவுள்ள நற்செய்தி: ஜனாதிபதி வெளியிட்டுள்ள தகவல்

Share

டிசம்பரில் வெளிவரவுள்ள நற்செய்தி: ஜனாதிபதி வெளியிட்டுள்ள தகவல்

கடன் மறுசீரமைப்பு பணிகள் டிசெம்பர் மாதத்திற்குள் நிறைவடையும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

பொதுத் தேர்தலுக்கான கம்பஹாவில் நேற்று (11) இடம்பெற்ற இறுதி தேர்தல் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, கடன் மறுசீரமைப்பு பணிகள் நிறைவடைந்த பின்னர் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க ஸ்திரத்தன்மையை அடைய முடியும் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில், டிசம்பரில், அடுத்த நான்கு மாதங்களுக்கான துணை மதிப்பீடு சமர்ப்பிக்கப்பட்டு, அடுத்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் மூலம் நாடு புதிய பொருளாதார திசைக்கு கொண்டு செல்லப்படும்.

ஓய்வூதியர்களின் கொடுப்பனவு ஏற்கனவே ரூ.3000 உயர்த்தியுள்ளோம். இழப்பீடு பெறுவதற்கு வேறு குழு உள்ளதா என பரிசீலனை செய்யப்படுகிறது.

அடுத்த வரவு செலவுத் திட்டத்தில் வருமானம் ஈட்டும்போது வரி நியாயமான விலக்குக்குக் கொண்டுவரப்படும் என்றார்.

Share
தொடர்புடையது
p0n6jgg8
செய்திகள்உலகம்

ஈரான் மீதான தாக்குதல்: உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள கடும் பாதிப்புகள்

கடந்த பிப்ரவரி 28-ம் தேதி ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து மேற்கொண்ட கூட்டுத்...

26 69b351d688c88
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத இலத்திரனியல் பொருட்கள் மீட்பு: பொலிஸார் தீவிர விசாரணை

யாழ்ப்பாணப் பகுதியில் அனுமதி இன்றி சட்டவிரோதமான முறையில் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த இலத்திரனியல் பொருட்கள் தொகுதி ஒன்றை...

20 12
செய்திகள்இந்தியா

இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர்: ஆகஸ்ட் மாதம் நிவாரண நிதி திரட்டும் போட்டிகள்!

கடந்த நவம்பர் மாதம் இலங்கையைத் தாக்கிய ‘டித்வா’ (Ditwah) சூறாவளியால் ஏற்பட்ட பெரும் பாதிப்புகளிலிருந்து மீண்டு...

19 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி: இன்றைய நிலவரம்!

இலங்கை நகை வியாபாரிகள் சங்கத்தின் தரவுகளின்படி, கடந்த சில நாட்களாக நிலவிய ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில்,...