இலங்கைசெய்திகள்

அமைச்சர் திரான் அலஸுக்கு மரண அச்சுறுத்தல்

Share
12
Share

அமைச்சர் திரான் அலஸுக்கு மரண அச்சுறுத்தல்

பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸுக்கு பாதாள உலகத்தில் இருந்து மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமை புலனாய்வு அமைப்புகளால் கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாக அமைச்சர் திரான் அலஸின் பாதுகாப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு புலனாய்வு அமைப்புகள் கோரியுள்ளன.

மேலும், பாதாள உலகத்தையும்,போதைப் பொருளையும் ஒடுக்குவதற்கான தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் பொலிஸாருக்கு பணிப்புரை வழங்கியுள்ள நிலையில், இந்த நடவடிக்கையின் கீழ் பெருமளவான போதைப்பொருள் கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாகவே அமைச்சருக்கு பாதாள உலக கும்பல்கள் அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எத்தனை பாதாள உலக அச்சுறுத்தல்கள் வந்தாலும் போதைப்பொருள் மற்றும் பாதாள உலக ஒழிப்பு நடவடிக்கை நிறுத்தப்படாது என அமைச்சர் திரான் அலஸ் நேற்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
Related Articles
25 1
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு கோடியே 72லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு ​கோடியே 72 லட்சத்து 96ஆயிரத்து 330 ​பேர் வாக்களிக்கத்...

24 1
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் ஏற்படுத்திய பயணி கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

23 2
இலங்கைசெய்திகள்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்! ​தொடர்புடைய மாணவர்கள் ஐவருக்கு மனஅழுத்தம்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரத்தில் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் ஐந்து மாணவிகள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

22 2
இலங்கைசெய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அனைத்து வங்கிகளும் நாளை காலை 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என இலங்கை வங்கி...