rtjy 63 scaled
இலங்கைசெய்திகள்

ஏறாவூர் பொலிஸ் சார்ஜன் மரணம்: திடுக்கிடும் தகவல்

Share

ஏறாவூர் பொலிஸ் சார்ஜன் மரணம்: திடுக்கிடும் தகவல்

கடந்த 30 ஆம் திகதி வெலிக்கந்தை பொலிஸ் நிலையத்தில் மட்டக்களப்பு ஏறாவூர் பகுதியைச் சேர்ந்த பொலிஸ் சார்ஜன் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

கடந்த ஆறு மாதங்களாக வெளிக்கந்தை பொலிஸ் நிலையத்தில் கடமை புரிந்து வந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான எம். எம். ஹனிபா என்பவரே இவ்வாறு மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

கடமையில் இருந்த பொலிஸ் சார்ஜன் ஹனிபா 30ஆம் திகதி இரவு நேர கடமையில் இருந்துள்ளார்.

அதிகாலை 3 மணியளவில் சிறிது நேரம் ஓய்வெடுப்பதற்காக தனது பொலிஸ் நிலையத்தில் உள்ள விடுதிக்கு சென்றவர் காலையில் இரத்த காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலமாக மீட்கப்பட்டுள்ள பொலிஸ் சார்ஜன் இதய வலியின் காரணமாக கண்ணாடியின் மேல் விழுந்து உயிரிழந்து உள்ளதாக குடும்பத்தினருக்கு தகவல் வழங்கப்பட்டிருந்தது.

எனினும் நான்கு நாட்களின் சடலத்தை உடற் கூற்று பரிசோதனை செய்த சட்ட வைத்திய அதிகாரி உயிரிழந்த பொலிஸ் சார்ஜன் கூறிய ஆயுதத்தால் குத்தப்பட்டு மரணிக்கப்பட்டு இருக்காலாம் எனவும் கத்தி போன்ற ஒரு கூறிய ஆயும் பாவிக்கபட்டு இருக்கலாம் எனவும் திடுக்கிடும் அதிர்ச்சி தகவலை வழங்கியிருந்தார்.

இந்நிலையில், தனது தந்தை கூறிய ஆயுதத்தால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் அது ஒரு கத்தியால் குத்திருக்கலாம் என உடல் கூற்று மருத்துவ பரிசோதனை அறிக்கை தெரிவிப்பதன் காரணமாக தனது தந்தை பொலிஸ் நிலையத்திலேயே வைத்து கொலை செய்யப்பட்டுள்ளதாக உயிரிழந்தவரின் மகன் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

மேலும், நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் கடந்த 35 தொடக்.40 வருடங்களாக பொலிஸ் சேவையில் இருந்த தனது தந்தையின் இழப்பிற்கும் மரணத்திற்கு ஒரு சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் இந்த நாட்டில் பொலிஸருக்கும் பாதுகாப்பு இல்லாத ஒரு நிலை உருவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
images 6 4
இலங்கைசெய்திகள்

சந்திரிக்காவின் நன்கொடை பாராட்டுக்குரியது: எதிர்க்கட்சிகளின் அரசியல் வங்குரோத்து குறித்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க விமர்சனம்!

ஊழலற்ற அரச நிர்வாகத்தை அமுல்படுத்தியுள்ளதால் தான் உலக நாடுகள் அனைத்தும் ஜனாதிபதி மீது நம்பிக்கை கொண்டு...

25 6939a0f597196
இலங்கைசெய்திகள்

சூறாவளியால் இலங்கைக் கரையோரப் பகுதி 143 கி.மீ மாசு: குப்பைகளை அகற்ற 3 வாரங்கள் ஆகும்!

‘திட்வா’ சூறாவளியால் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக, இலங்கையின் கரையோரப் பகுதியில் 143 கிலோ மீற்றர்...

25 6939a5588b95b
இலங்கைசெய்திகள்

மூன்றாம் தவணையில் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறைமை இல்லை: பரீட்சைகள் இரத்து!

இந்த ஆண்டு மூன்றாம் தவணை முடிவில் பாடசாலை மாணவர்களுக்கு எந்த விதத்திலும் மதிப்பெண் வழங்கும் முறைமை...

images 5 4
இந்தியாசெய்திகள்

13 வருடங்களுக்குப் பிறகு தீர்ப்பு: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞனுக்கு 3 ஆண்டுகள் சிறை!

தமிழகத்தின் தூத்துக்குடியில் 2012ஆம் ஆண்டு சிறுமி ஒருவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், இளைஞர் ஒருவருக்கு...