இலங்கைசெய்திகள்

பேருந்தில் பயணித்தவர் திடீரென மரணம்

rtjy 266 scaled
Share

பேருந்தில் பயணித்தவர் திடீரென மரணம்

கண்டி போதனா வைத்தியசாலைக்கு சென்றுவிட்டு பேருந்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் பேருந்திலேயே உயிரிழந்துள்ளார்.

திக் ஓயா படல்கல மேல் பகுதியில் வசிக்கும் நபரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபர் முச்சக்கரவண்டி சாரதி என்பதுடன், தொற்று அல்லாத நோய்க்காக மாதம் ஒருமுறை கண்டி போதனா வைத்தியசாலைக்கு செல்வதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்று காலை ஹட்டனில் இருந்து பொடைஸ் நோக்கி தனியார் பேருந்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இவர் பேருந்தில் இருந்து இறங்காததால் சந்தேகமடைந்த ஏனைய பயணிகள் இது குறித்து சாரதி மற்றும் நடத்துனரிடம் தெரிவித்ததையடுத்து அவர் உயிரிழந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஹட்டன் பொலிஸாரின் பணிப்புரைக்கமைய, உயிரிழந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையின் சடலம் அதே பேருந்தில் திக் ஓயா ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு ஒப்படைக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் ஹட்டன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share
Related Articles
8 10
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றத்தில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக நாடாளுமன்ற...

10 10
இலங்கைசெய்திகள்

ரணிலின் வெளிநாட்டு பயணங்களால் ஏற்பட்ட செலவு : அமைச்சர் வெளியிட்ட தகவல்

ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 1.27 பில்லியன் ரூபா...

6 11
உலகம்செய்திகள்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்கியதில் 13 இந்தியர்கள் பலி

காஷ்மீர்(Kasmir) மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 13 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்....

9 10
இலங்கைசெய்திகள்

விமான சேவையை நிறுத்தும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

இந்தியா – பாகிஸ்தான் போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக...