இலங்கைக்கு கிடைத்துள்ள மில்லியன் டொலர்கள்!
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கு கிடைத்துள்ள மில்லியன் டொலர்கள்!

Share

இலங்கைக்கு கிடைத்துள்ள மில்லியன் டொலர்கள்!

இந்த வருடத்தின் முதல் ஏழு மாத காலப்பகுதிக்குள் 763,000 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாகவும் அவர்களால் 800 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை பெற முடிந்துள்ளதாகவும் சுற்றுலா இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார்.

ஸ்திரமான நாட்டிற்கு ஒரு வழி என்ற தொனிப்பொருளில் நேற்று (01.08.2023) ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே டயானா கமகே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு சுற்றுலாத்துறையின் பங்களிப்பை அதிகப்படுத்துவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டம் வெற்றியடைந்துள்ளதுடன், சுற்றுலாத்துறையை மேலும் மேம்படுத்துவதற்காக அரச அமைச்சினால் புதிய வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், சுற்றுலாத் துறையை மேம்படுத்த பாரம்பரிய முறைகளை கைவிட வேண்டும் என்றும், பாரம்பரிய நகரங்களுக்கு சுற்றுலாப் பயணிகள் வருவதில்லை என்றும், சுற்றுலாப் பயணிகளுக்காக செயல்படும் நகரங்களை உருவாக்குவது அவசியம் என்றும் டயானா கமகே தெரிவித்துள்ளார்.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
GettyImages 1202240221
செய்திகள்உலகம்

மார்ச் 20-ல் வெளியாகிறது புதிய BTS அல்பம் – உலகச் சுற்றுப்பயணத்திற்கும் தயார்!

உலகெங்கும் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்டுள்ள தென் கொரியாவின் புகழ்பெற்ற கே-பாப் (K-pop) இசைக் குழுவான BTS,...

44520176 vijay33
செய்திகள்இந்தியா

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: த.வெ.க. தலைவர் விஜய்க்கு சி.பி.ஐ. அழைப்பாணை – ஜனவரி 12-ல் விசாரணை!

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) பிரசாரத்தின் போது...

gold 5
செய்திகள்இலங்கை

தொடர்ந்து உயரும் தங்கம்: இன்றும் பவுணுக்கு 3,000 ரூபாய் அதிகரிப்பு – புதிய விலைப் பட்டியல் இதோ!

இலங்கையில் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாகத் தொடர்ச்சியான ஏற்றத்தைக் கண்டு வருகின்றது. நேற்று (05)...

1739116331 energy min
இலங்கைஏனையவைசெய்திகள்

மூன்று ஆண்டுகளில் 30% கட்டணக் குறைப்பு: நாடாளுமன்றத்தில் அமைச்சர் குமார ஜயகொடி உறுதி!

வாக்குறுதியளித்தபடி மூன்று ஆண்டுகளுக்குள் மின்சாரக் கட்டணத்தை மூன்றில் ஒரு பங்காகக் குறைக்கும் இலக்கை நோக்கி அரசாங்கம்...