இலங்கைக்கு கிடைத்துள்ள மில்லியன் டொலர்கள்!
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கு கிடைத்துள்ள மில்லியன் டொலர்கள்!

Share

இலங்கைக்கு கிடைத்துள்ள மில்லியன் டொலர்கள்!

இந்த வருடத்தின் முதல் ஏழு மாத காலப்பகுதிக்குள் 763,000 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாகவும் அவர்களால் 800 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை பெற முடிந்துள்ளதாகவும் சுற்றுலா இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார்.

ஸ்திரமான நாட்டிற்கு ஒரு வழி என்ற தொனிப்பொருளில் நேற்று (01.08.2023) ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே டயானா கமகே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு சுற்றுலாத்துறையின் பங்களிப்பை அதிகப்படுத்துவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டம் வெற்றியடைந்துள்ளதுடன், சுற்றுலாத்துறையை மேலும் மேம்படுத்துவதற்காக அரச அமைச்சினால் புதிய வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், சுற்றுலாத் துறையை மேம்படுத்த பாரம்பரிய முறைகளை கைவிட வேண்டும் என்றும், பாரம்பரிய நகரங்களுக்கு சுற்றுலாப் பயணிகள் வருவதில்லை என்றும், சுற்றுலாப் பயணிகளுக்காக செயல்படும் நகரங்களை உருவாக்குவது அவசியம் என்றும் டயானா கமகே தெரிவித்துள்ளார்.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
29 8
செய்திகள்விளையாட்டு

FIFA உலகக் கோப்பை 2026: அமெரிக்கப் போட்டிகளை மெக்சிகோவிற்கு மாற்ற ஈரான் கோரிக்கை!

அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய நாடுகளில் இணைந்து நடைபெறவுள்ள 2026-ஆம் ஆண்டுக்கான FIFA உலகக்...

28 7
உலகம்செய்திகள்

ஈரான் போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய பணிப்பாளர் ஜோ கென்ட் இராஜினாமா!

அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் (NCTC) பணிப்பாளர் ஜோ கென்ட், ஈரானுக்கு எதிரான போரில்...

27 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் கோர விபத்து: அண்ணன், தங்கை இருவர் பரிதாபமாக உயிரிழப்பு

யாழ்ப்பாணம் கொழும்புத்துறை வீதியில் நேற்றிரவு (16) இடம்பெற்ற பயங்கர வீதி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த...

26 8
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

விஷ ஒளடதங்களை அழிப்பதற்கான சட்டத் திருத்தம்: புதிய நடைமுறைகளை வகுக்க குழு நியமனம்

விஷ ஒளடதங்கள் மற்றும் ஆபத்தான போதைப்பொருட்கள் தொடர்பான நீதிமன்றச் செயல்பாடுகளில் காணப்படும் சட்டச் சிக்கல்களைத் தீர்ப்பதற்காக,...