சர்ச்சையில் சிக்கிய கிரிக்கெட் வீரர்! நலம் விசாரித்த சனத் ஜயசூரிய
இலங்கைசெய்திகள்

சர்ச்சையில் சிக்கிய கிரிக்கெட் வீரர்! நலம் விசாரித்த சனத் ஜயசூரிய

Share

சர்ச்சையில் சிக்கிய கிரிக்கெட் வீரர்! நலம் விசாரித்த சனத் ஜயசூரிய

முன்னாள் கிரிக்கெட் வீரர் சனத் ஜயசூரிய மற்றும் சுற்றுலா அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ ஆகியோர் அவுஸ்திரேலியாவில் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொண்டுள்ள கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவை சந்தித்துள்ளனர்.

அவுஸ்திரேலியாவில் உணவகம் ஒன்றில் இடம்பெற்ற இந்த சந்திப்பு தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

20க்கு 20 உலகக்கிண்ண கிரிக்கட் போட்டிக்காக அவுஸ்திரேலியாவுக்கு சென்றிருந்த நிலையில், தனுஷ்க, பெண் ஒருவரை பலவந்தமாக பாலியல் உறவுக்கு உட்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இதனை தொடர்ந்து தனுஷ்க குணதிலக்க மீது பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பில் 4 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், இதுவரை அவர் குற்றத்தை ஒப்புக்கொள்ளாத நிலையில் வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.

இதனை தொடர்ந்து தனுஷ்க குணதிலக்க தனது பிணை நிபந்தனைகளை மீளாய்வு செய்யுமாறு கோரிக்கை விடுத்திருந்த நிலையில், வழக்கினை ஆராய்ந்த சிட்னி நீதிமன்றம் பிணை நிபந்தனைகளை தளர்த்தி உத்தரவிட்டிருந்தது.

அதன்படி, அவர் மீண்டும் வாட்ஸ்அப்பை பயன்படுத்தவும், இரவில் வெளியே செல்லவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
images 6 2
செய்திகள்உலகம்

பிரித்தானியாவில் புதிய சகாப்தம்: கடவுச்சீட்டு சோதனை இல்லை, நீண்ட வரிசை இல்லை! – AI மூலம் விமான நிலையங்களில் முக ஸ்கேன் அனுமதி!

பிரித்தானியா, தனது விமான நிலையம் ஒன்றில், நவீன தொழில்நுட்பம் மூலம் கடவுச்சீட்டு சோதனை இல்லாமலே பயணிகளை...

skynews donald trump benjamin netanyahu 7080062
செய்திகள்உலகம்

ஊழல் வழக்கில் நெதன்யாகுவை மன்னிக்க வேண்டும்: ட்ரம்ப் கடிதத்துக்கு இஸ்ரேல் ஜனாதிபதி அலுவலகம் மறுப்பு!

ஊழல் வழக்குகளில் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை (Benjamin Netanyahu) மன்னிக்குமாறு அந்நாட்டு ஜனாதிபதி ஐசக்...

articles2FgwJ5r85aOgQuM4EhGVg6
அரசியல்இலங்கைசெய்திகள்

நுகேகொடைப் பேரணி மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நினைவூட்டவே: எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து அழுத்தம் கொடுப்போம் – நாமல் ராஜபக்ச!

எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி நுகேகொடையில் நடைபெறவிருக்கும் அரசாங்கத்திற்கு எதிரான பொதுப் பேரணி, அரசாங்கம் மக்களுக்கு...

25 6915d20fc755f
செய்திகள்அரசியல்இலங்கை

வென்றெடுக்கப்பட்ட அதிகாரம் பொதுமக்களுக்காக மட்டுமே; சட்டத்தின் முன் அனைவரும் சமமே”: கார்த்திகை வீரர்கள் தினத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க!

வென்றெடுக்கப்பட்ட அதிகாரம் பொதுமக்களுக்காக மாத்திரமே என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று நடைபெற்ற கார்த்திகை வீரர்கள்...