7 scaled
இலங்கைசெய்திகள்

வெப்பமான காலநிலையால் ஏற்படவுள்ள ஆபத்து – இலங்கை வாழ் மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

Share

வெப்பமான காலநிலையால் ஏற்படவுள்ள ஆபத்து – இலங்கை வாழ் மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

இலங்கையின் பல பகுதிகளில் நிலவி வரும் வெப்பமான காலநிலையானது மே மாதம் வரையில் நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் கொழும்பு மாவட்டத்தில் 36.8 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவு செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், குருநாகல், காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் வசிப்பவர்களின் உடலால் உணரப்படும் வெப்பநிலையானது வழமையயை விட அதிகமானதாக இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனால் உடலுக்கு சில பதிப்பு ஏற்படும் என எச்சரித்துள்ளனர்.

தலைவலி, வயிற்று வலி, கண் எரிச்சல், தலைமுடி உதிர்தல், தோல் நோய், உடல் எடை குறைதல் மற்றும் சிறுநீரக பாதிப்பு போன்ற பாதிப்புகள் உடல் ரீதியாக ஏற்படும் எனவும் அதற்கு தேவையான முன்னாயத்தம் எடுத்துக்கொள்வது நல்லது எனவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மேலும் இன்றும் நாளையும் நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் அதிக வெப்பநிலை நிலவும் சந்தர்ப்பங்களில் விளையாட்டுப் பயிற்சிகள் மற்றும் வெளிப்பு செயற்பாடுகளில் ஈடுப்படுவதை தவிர்த்துக்கொள்ளுமாறு கல்வி அமைச்சினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...