7 scaled
இலங்கைசெய்திகள்

வெப்பமான காலநிலையால் ஏற்படவுள்ள ஆபத்து – இலங்கை வாழ் மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

Share

வெப்பமான காலநிலையால் ஏற்படவுள்ள ஆபத்து – இலங்கை வாழ் மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

இலங்கையின் பல பகுதிகளில் நிலவி வரும் வெப்பமான காலநிலையானது மே மாதம் வரையில் நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் கொழும்பு மாவட்டத்தில் 36.8 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவு செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், குருநாகல், காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் வசிப்பவர்களின் உடலால் உணரப்படும் வெப்பநிலையானது வழமையயை விட அதிகமானதாக இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனால் உடலுக்கு சில பதிப்பு ஏற்படும் என எச்சரித்துள்ளனர்.

தலைவலி, வயிற்று வலி, கண் எரிச்சல், தலைமுடி உதிர்தல், தோல் நோய், உடல் எடை குறைதல் மற்றும் சிறுநீரக பாதிப்பு போன்ற பாதிப்புகள் உடல் ரீதியாக ஏற்படும் எனவும் அதற்கு தேவையான முன்னாயத்தம் எடுத்துக்கொள்வது நல்லது எனவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மேலும் இன்றும் நாளையும் நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் அதிக வெப்பநிலை நிலவும் சந்தர்ப்பங்களில் விளையாட்டுப் பயிற்சிகள் மற்றும் வெளிப்பு செயற்பாடுகளில் ஈடுப்படுவதை தவிர்த்துக்கொள்ளுமாறு கல்வி அமைச்சினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
25 10
இந்தியாசெய்திகள்

டெல்லி தீ விபத்து: மூன்று குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல்!

இந்தியத் தலைநகர் டெல்லியின் பாலம் (Palam) பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்றில் இன்று...

20 17
செய்திகள்அரசியல்இலங்கை

நாமலுக்கு எதிரான மின்சாரக் கட்டண நிலுவை வழக்கு: ஜூலை 1-ம் திகதி உயர் நீதிமன்றத்தில் விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமண நிகழ்விற்காகப் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான 20 இலட்சம் ரூபாவிற்கும் (2...

19 15
செய்திகள்உலகம்

அலி லாரிஜானி படுகொலைக்கு ஈரான் பதிலடி: டெல் அவிவ் மீது கிளஸ்டர் ரக குண்டுகளால் தாக்குதல்!

ஈரானின் மூத்த பாதுகாப்புத் தலைவரான அலி லாரிஜானி, இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, இஸ்ரேலின் டெல்...

18 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் புத்தாண்டுக்கு முன் வெளியீடு: பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தகவல்!

2025-ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள், எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ்...