18 14
இலங்கைசெய்திகள்

சஜித் கட்சியின் தேசியப் பட்டியல் ஆசனத்தை கோரும் தமிதா அபேரத்ன

Share

சஜித் கட்சியின் தேசியப் பட்டியல் ஆசனத்தை கோரும் தமிதா அபேரத்ன

சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியலில் தமக்கு ஆசனம் வழங்கப்பட வேண்டுமென பிரபல நடிகை தமிதா அபேரத்ன கோரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பில் நேற்றைய தினம் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட போது அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

எதிர்வரும் நவம்பர் மாதம் 14ம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் தமிதா போட்டியிடவிருந்தார்.

இந்நிலையில், ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் தமிதா இரத்திரனபுரி மாவட்டத்தில் களமிறங்குவதாக அறிவிக்கப்பட்டது.

எனினும் இறுதி நேரத்தில் தமிதாவின் பெயர் குறித்த வேட்பு மனு பட்டியலில் இணைக்கப்பட்டிருக்கவில்லை.

இந்த நிலையில் தமிதா ஐக்கிய மக்கள் சக்தி நிர்வாகத்தை கடுமையாக சாடி வருகின்றார்.

தொடர்பாடல் பிரச்சினையால் தமது பெயர், வேட்பாளர் பட்டியலில் இடம்பெறவில்லை என கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார கூறியுள்ளதாகவும் அவ்வாறென்றால் கட்சியில் இருப்பவர்களுக்கு எழுதத் தெரியாத அல்லது கட்புலன் மற்றும் செவிப்புலன் அற்றவர்களா என தமிதா அபேரத்ன கேள்வி எழுப்பியுள்ளார்.

இவ்வாறு தொடர்பாடல் பிரச்சினையால் தமக்கு வேட்பு மனுவில் இடம் வழங்கப்படவில்லை என்றால் தேசியப் பட்டியல் ஆசனமொன்று தமக்கு வழங்கப்பட வேண்டுமென அவர் கோரியுள்ளார்.

கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தேசியப் பட்டியலிலிருந்து விலகி தமக்கு அந்த இடத்தை வழங்க வேண்டுமென கோரியுள்ளார்.

தொடர்பாடல் பிரச்சினை என ரஞ்சித் மத்துமபண்டார கூறுவது நகைப்பிற்குரிய விடயமாகும் என தமித தெரிவித்துள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 21 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஏப்ரல் முதல் வாகனங்களுக்குப் புதிய வரி! – அவசரப்பட்டு வாகனங்களை வாங்க வேண்டாம் என இறக்குமதியாளர்கள் சங்கம் கோரிக்கை!

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு எதிர்வரும் ஏப்ரல் 1, 2026 முதல் 2.5 சதவீத சமூக...

image 1200x800 20 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வைத்தியர் சத்தியமூர்த்தி அதிரடி முறைப்பாடு! – மக்கள் எழுச்சி கட்சி நிறுவனருக்கு எதிராகப் பொலிஸார் விசாரணை!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி அவர்கள், அகில இலங்கை மக்கள் எழுச்சி...

image 1200x800 19 2
செய்திகள்இந்தியா

இஸ்ரேல் செல்லும் பிரதமர் மோடி! – 56 இராணுவ நிறுவனங்களுக்கு இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தங்கள் கையெழுத்து!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரும் பிப்ரவரி 25-ஆம் திகதி இஸ்ரேலுக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ...

001
செய்திகள்அரசியல்இலங்கை

சிஐடி-யில் ஆஜராகிறார் பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்க! – நிதி துஷ்பிரயோக வழக்கில் பரபரப்பு விசாரணை!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நிதி முறைகேடு தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக, அவரது...