7 7
இலங்கைசெய்திகள்

தம்புள்ளையில் பெண்களின் திருட்டுச் சம்பவத்தில் சர்ச்சை

Share

தம்புள்ளையில் பெண்களின் திருட்டுச் சம்பவத்தில் சர்ச்சை

தம்புள்ளை நகரிலுள்ள கையடக்க தொலைபேசி கடையொன்றில் இருந்து கைத்தொலைபேசி மற்றும் உபகரணங்கள் திருடியமை தொடர்பில் சமூக ஊடகங்களில் பரவிவரும் காணொளியை உடன் அகற்றுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.

குறித்த காணொளியில் சிறுவன் உள்ளமையினால், காணொளியை நீக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டதாக அதன் தலைவரும், சிரேஷ்ட விரிவுரையாளருமான உதயகுமார அமரசிங்க தெரிவித்தார்.

இரண்டு பெண்கள், சிறுவன் ஒருவருடன் கையடக்க தொலைபேசி கடைக்கு சென்று தொலைபேசி மற்றும் பொருட்களை திருடிச் சென்றுள்ளனர்.

சமூக ஊடகங்களில் சிறுவனின் உருவம் அடங்கிய காணொளி பரவல் தொடர்பில் மேற்கொண்ட விசாரணையின் போதே தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன் ஊடாக சிறுவனின் உரிமை மீறப்பட்டுள்ளது. இது சட்டத்தை மீறி செய்யப்பட்ட ஒரு செயலாகும்.

ஒரு குற்றச் செயல் தொடர்பாக சமூக ஊடகங்கள் மூலம் சிறுவர்கள் தொடர்பான அல்லது சந்தேகப்படும்படியான படங்களை பரப்புவது நெறிமுறைக்கு புறம்பானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆனால், வீடியோவை இணையத்தில் வெளியிட்ட நபரை தற்போதுள்ள சட்டத்தின்படி கையாள்வதில் சிரமம் உள்ளதென அவர் கூறியுள்ளார்.

அதற்கமைய, எந்தவொரு குற்றச்சாட்டையும் இணையத்தில் வெளியிடும் நபர்களுக்கு எதிராக சட்டங்கள் அவசரமாக தயாரிக்கப்பட வேண்டும் என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவரும், சிரேஷ்ட விரிவுரையாளருமான உதயகுமார அமரசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

 

Share
தொடர்புடையது
40 1
உலகம்செய்திகள்

உலகின் சிறந்த 10 வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் – ரஷ்யாவின் S-400 முதல் இஸ்ரேலின் Iron Dome வரை

இன்றைய நவீன போர் சூழலில், வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் ஒரு நாட்டின் பாதுகாப்புக்கான முதன்மை ஆயுதமாக...

39 1
உலகம்செய்திகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் ரூ.4,000 கோடியை செலவிட்ட இந்திய சுற்றுலாப் பயணிகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் இந்திய சுற்றுலாப் பயணிகள் ரூ.4,000 கோடியை செலவிட்டுள்ளனர். துருக்கியின் சுற்றுலாத்...

38 1
உலகம்செய்திகள்

இந்த காரணங்களால் இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுதப் போரில் ஈடுபடாது… விரிவான பின்னணி

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு இந்தியாவின் இராணுவ பதிலடி நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூரை அடுத்த நாட்களில், இந்த...

26 7
இலங்கைசெய்திகள்

இறம்பொடையில் மற்றுமொரு விபத்து: 12 பேர் படுகாயம்

நுவரெலியா – கண்டி வீதியில் இறமம்பொட ஒத்த கடை அருகே வான் ஒன்று பாதையிலிருந்து கவிழ்ந்து...