6 15
இலங்கைசெய்திகள்

இலங்கையை நெருங்கும் புயல்! நாட்டுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Share

இலங்கையின் தெற்கு மற்றும் தென்மேற்கு கடல் பகுதிகளில் பலத்த மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று எதிர்வுகூறப்பட்டுள்ளது.

நாட்டின் தெற்குப் பகுதியிலும் மாலத்தீவைச் சுற்றியுள்ள கடல் பகுதியிலும் தற்போது பலத்த மழை பெய்யும் சாத்தியம் உள்ளதாக காற்று வரைபடம் மற்றும், வானிலை முன்னறிவிப்பு அறிக்கையில்(windy) சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறித்த மழை வீழ்ச்சி நாட்டின் மேற்கு, சப்ரகமுவ மற்றும் தெற்கு மாகாணங்களிலும், மத்திய மாகாணத்தின் பல பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

அத்தோடு அடுத்த சில நாட்களில் மழை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தெற்கு மற்றும் தென்மேற்கு மாகாணங்களில் (மேற்கு, சப்ரகமுவ, தெற்கு, வடமேற்கு) பலத்த மழை பெய்ய அதிக வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

வடமத்திய, மத்திய, ஊவா, சப்ரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை மற்றும் கம்பஹா மாவட்டங்களிலும் பிற்பகல் நாளை பி.ப 2.00 மணிக்குப் பிறகு இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
03 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி: இன்று ஒரே நாளில் ரூ. 13,000 குறைவு!

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையிலும் தங்கத்தின் விலை கணிசமாகக் குறைந்துள்ளதாக சந்தைத்...

25 10
இந்தியாசெய்திகள்

டெல்லி தீ விபத்து: மூன்று குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல்!

இந்தியத் தலைநகர் டெல்லியின் பாலம் (Palam) பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்றில் இன்று...

20 17
செய்திகள்அரசியல்இலங்கை

நாமலுக்கு எதிரான மின்சாரக் கட்டண நிலுவை வழக்கு: ஜூலை 1-ம் திகதி உயர் நீதிமன்றத்தில் விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமண நிகழ்விற்காகப் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான 20 இலட்சம் ரூபாவிற்கும் (2...

19 15
செய்திகள்உலகம்

அலி லாரிஜானி படுகொலைக்கு ஈரான் பதிலடி: டெல் அவிவ் மீது கிளஸ்டர் ரக குண்டுகளால் தாக்குதல்!

ஈரானின் மூத்த பாதுகாப்புத் தலைவரான அலி லாரிஜானி, இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, இஸ்ரேலின் டெல்...