20 8
இலங்கைசெய்திகள்

சதொசவில் தேங்காய் வாங்க வந்த மக்களுக்கு கிடைத்த ஏமாற்றம்

Share

சதொசவில் தேங்காய் வாங்க வந்த மக்களுக்கு கிடைத்த ஏமாற்றம்

போதிய அரிசி மற்றும் தேங்காய் இல்லாததால் சதொச விற்பனை நிலையத்திற்கு வந்த பல வாடிக்கையாளர்கள் இன்றும் (08) ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது நிலவும் தட்டுப்பாடு காரணமாக சந்தையில் தேங்காய் மற்றும் அரிசியின் விலைகள் வேகமாக அதிகரித்து வருவதால், அவற்றை சலுகை விலையில் விற்பனை செய்யும் வேலைத்திட்டத்தை சதொச நிறுவனம் கடந்த வியாழக்கிழமை ஆரம்பித்தது.

அதன்படி இன்று சதொச கடைகளில் அரிசி மற்றும் தேங்காய்க்கு கடும் கிராக்கி ஏற்பட்டது. எனினும் இன்று சில சதொச கடைகளில் அரிசி மற்றும் தேங்காய் வரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இறக்குமதி செய்யப்பட்ட அரிசி இருப்புக்கள் அடுத்த வாரம் நாட்டிற்கு வரும் என அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் வழங்கிய அறிவுறுத்தல்களுக்கு இணங்க ஏற்கனவே பல இறக்குமதியாளர்கள் இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இருந்து அரிசி இருப்புக்களுக்கு ஓடர் செய்துள்ளதாக இறக்குமதியாளர்கள் சங்கத்தின் பேச்சாளர் ஒருவர் கொழும்பு ஊடகமொன்றிடம் தெரிவித்தார்.

Share

Recent Posts

தொடர்புடையது
images 8
செய்திகள்இலங்கை

யாழ். செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு ஒத்திவைப்பு: மழை காரணமாக அடுத்த ஆண்டு ஜனவரி 19-இல் மீண்டும் ஆராய முடிவு!

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் குறித்துத் தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது....

image d1460108ca
இலங்கைசெய்திகள்

உயிர் அச்சத்துடன் பயணிக்கும் மக்கள்: ஒட்டுசுட்டான் பனிக்கன்குளத்தில் தொடருந்து கடவை அமைக்கக் கோரிக்கை!

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் கிராம அலுவலர் பிரிவில், தொடருந்து கடவை...

25 690859776f0a2
செய்திகள்இலங்கை

காவல்துறைக் காவலில் இருந்த சந்தேகநபர் உயிரிழப்பு: கந்தேகெட்டிய சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள்!

நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட இரண்டு பிடியாணைகளின் பேரில் கைது செய்யப்பட்ட 46 வயதுடைய சந்தேக நபர் ஒருவர்,...