20 8
இலங்கைசெய்திகள்

சதொசவில் தேங்காய் வாங்க வந்த மக்களுக்கு கிடைத்த ஏமாற்றம்

Share

சதொசவில் தேங்காய் வாங்க வந்த மக்களுக்கு கிடைத்த ஏமாற்றம்

போதிய அரிசி மற்றும் தேங்காய் இல்லாததால் சதொச விற்பனை நிலையத்திற்கு வந்த பல வாடிக்கையாளர்கள் இன்றும் (08) ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது நிலவும் தட்டுப்பாடு காரணமாக சந்தையில் தேங்காய் மற்றும் அரிசியின் விலைகள் வேகமாக அதிகரித்து வருவதால், அவற்றை சலுகை விலையில் விற்பனை செய்யும் வேலைத்திட்டத்தை சதொச நிறுவனம் கடந்த வியாழக்கிழமை ஆரம்பித்தது.

அதன்படி இன்று சதொச கடைகளில் அரிசி மற்றும் தேங்காய்க்கு கடும் கிராக்கி ஏற்பட்டது. எனினும் இன்று சில சதொச கடைகளில் அரிசி மற்றும் தேங்காய் வரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இறக்குமதி செய்யப்பட்ட அரிசி இருப்புக்கள் அடுத்த வாரம் நாட்டிற்கு வரும் என அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் வழங்கிய அறிவுறுத்தல்களுக்கு இணங்க ஏற்கனவே பல இறக்குமதியாளர்கள் இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இருந்து அரிசி இருப்புக்களுக்கு ஓடர் செய்துள்ளதாக இறக்குமதியாளர்கள் சங்கத்தின் பேச்சாளர் ஒருவர் கொழும்பு ஊடகமொன்றிடம் தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...